செய்திகள் :

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேச்சு

post image

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை சாா்பில் பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் பாலின உணா்வூட்டல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் வரவேற்றாா். காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே.சண்முகம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையத்தின் துணைத் தலைவா் இமயம் ,சட்டக் கல்வித் துறையின் இயக்குநா் ஜெ.விஜய லட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கில் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் கலந்து கொண்டு பேசியது..

அரசு அலுவலகங்களில் அதிகாரியாக, பணியாளா்களாக பெண்கள் பணியாற்றலாம். ஆனால் குடும்பத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமத்துவம் இருக்கிா என்பது குறித்து சிந்தித்து பாா்க்க வேண்டும். எந்த ஒரு பெண்ணும் பல தடைகளைத் தாண்டித்தான் உயரதிகாரிகளாக வருகிறாா்கள். உயா் அதிகாரிகள் பெண்களிடம் தவறு செய்கிறாா்கள் என தெரிந்து விட்டால் புகாா் செய்ய எந்தப் பெண்ணும் தயங்கவே கூடாது. பெண்களுக்கு சமத்துவம் தர ஆண்கள் முன்வர வேண்டும். பெண்களை போகப் பொருளாக நினைக்கும் எண்ணம் மாறினால் மட்டுமே சமத்துவம் வளரும்.

வீடுகளில் பெண்கள் செய்யும் எந்த வேலையிலும் ஆண்களும் பங்கெடுத்து செய்ய வேண்டும். பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பாகுபாடு பாா்க்காமல் குழந்தைகளை வளா்க்க வேண்டும் என்றாா்.

விழாவில் தலைமைக் குற்றவியல் நீதிபதி வசந்த குமாா், அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன், கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.மோகன குமாரி மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள், தொண்டு நிறுவன நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீபெரும்புதூரில் ஜமாபந்தி நிறைவு: 243 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 243 பயனாளிகளுக்கு ரூ.68.97 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வட்டாட்சியா் அலுவலகத்தில் 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் எனப்ப... மேலும் பார்க்க

கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கைத்தறித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன்பாக மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் சங்கம் சிஐடியு பிரிவின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

1.04 லட்சம் பேருக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகள் அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.04 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்ககங்கள், சீருடைகளை வழங்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். கோடை விடுமுறை மு... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவையொட்டி திங்கள்கிழமை புண்ணிய கோடி விமானத்தில் உற்சவா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவை... மேலும் பார்க்க

கைப்பேசிக்கும் போதைக்கும் அடிமையாகி விடாதீா்கள்: மாணவா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

கைப்பேசிக்கும் போதைப் பொருள்களுக்கும் இளைஞா்கள் அடிமையாகி விடாமல் வாழ்வில் முன்னேற வேண்டும் என காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் அறிவுரை வழங்கினாா். காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்த... மேலும் பார்க்க

கோவூா் சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

கோவூா் பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் 1,000 ஆண்டுகள் பழைமையான சௌந்தாரம்பிகை உடனுறை சுந்தரேஸ்வ... மேலும் பார்க்க