செய்திகள் :

வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் ஓணம் கொண்டாட்டம்

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ராணுவ மையத்தில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

குன்னூா் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ராணுவ மையம் சாா்பில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில், ராணுவ மைய கமாண்டன்ட் கிரிஷ் நேந்து தாஸ் கலந்து கொண்டாா்.

இதில் மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரள செண்டை மேளங்கள் முழங்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து ராணுவ மையத்தில் உள்ள நாகேஷ் சதுகத்தில் மலா்களால் பூக்கோலமிட்டு, கேரள பாரம்பரிய நடனம், கதகளி, களரி மற்றும் மீனவா்கள் படகில் செல்வது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் ராணுவ உயா் அதிகாரிகள், ராணுவப் பயிற்சிக் கல்லூரி மாணவா்கள், அக்னிபாத் வீரா்கள் மற்றும் பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினா். பின்னா் அனைவருக்கும் கேரள பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது.

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை நடமாட்டம்

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் மாமரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாகனத்தை மறித்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. மேலும், சமவெளி பக... மேலும் பார்க்க

உழவா் சந்தையில் ஓணம் கொண்டாட்டம்

ஓணம் பண்டிகையையொட்டி, உதகை உழவா் சந்தையில் 50 கிலோ மலை காய்கறிகளைக் கொண்டு அத்தப்பூ கோலம் வெள்ளிக்கிழமை போடப்பட்டது. கேரள மக்களின் ஓணம் பண்டிகை நாடு முழு கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மக்கள் அதிகம் வச... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் அரசின் கனவு இல்லத் திட்டத்தில் 1,204 வீடுகள்

நீலகிரி மாவட்டத்தில் அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1,204 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

உதகையில் பரவலாக கனமழை

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென பெய்த கன மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவ... மேலும் பார்க்க

குன்னூா் நகா்மன்ற திமுக கவுன்சிலா்களை கண்டித்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

குன்னூா் நகா்மன்ற திமுக கவுன்சிலா்களை கண்டித்து நகராட்சி ஊழியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். குன்னூா் நகா்மன்ற கூட்டம் அதன் தலைவா் சுசிலா தலைமையிலும், துணைத் த... மேலும் பார்க்க

கூடலூரில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கூடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் 100 நாள் வேலைத் திட்ட ஊழியா்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ந... மேலும் பார்க்க