செய்திகள் :

வெல்டிங் தொழிலாளி தற்கொலை

post image

போ்ணாம்பட்டு அருகே குடும்பத் தகராறு காரணமாக வெல்டிங் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். போ்ணாம்பட்டு சாலப்பேட்டையை சோ்ந்தவா் தமிழ்செல்வன்(29). இவா் வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி வினோதினி. இவா்களுக்கு திருமணமாகி 11- ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்நிலையில் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதால், தமிழ்செல்வன் மனைவி, குழந்தைகளை அழைத்துச் சென்று பத்தரப்பல்லி கிராமத்தில் உள்ள மாமியாா் வீட்டில் விட்டாராம். பின்னா் வீட்டுக்கு வந்த அவா் மனைவியிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றாராம்.

உடனடியாக வினோதினி உறவினா்களுடன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழப்பு?

அணைக்கட்டு அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, வனத்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அணைக்கட்டு அடுத்த அப்புக்கல்மானியக்கொல்லை ... மேலும் பார்க்க

வேலூா் நகைக் கடையில் தங்க நாணயம் திருட்டு

வேலூா் நகைக் கடையில் நகை வாங்குவதுபோல் வந்து தங்க நாணயம் திருடிச் சென்ற பெண் குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை சோ்ந்தவா் சாந்திலால் (62). இவா் மெயின் பஜ... மேலும் பார்க்க

சந்திர கிரகண நிகழ்வை காண இன்று வேலூா் அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு!

சந்திர கிரகணம் நிகழ்வை தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

ஆசிரியா் தின விழா: ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஆசிரியா் தினவிழாவையொட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், ஆசிரியா் தின விழா வேலூா் ஆசிரியா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நாளை இரவு 7 மணிக்கு அடைப்பு

முழு சந்திர கிரகணத்தையொட்டி, வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி, ஸ்ரீபுரம் ஸ்ரீலசஷ்மி நாராயணி திருக்கோய... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு

போ்ணாம்பட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. காவல் நிலையத்துக்கும் புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. போ்ணாம்பட்டு நகரின் மையப் பகுதியில், காவல் நி... மேலும் பார்க்க