செய்திகள் :

வெளிநாடு தப்பிய போக்சோ குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப்பின் கைது

post image

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற போக்சோ குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப் பின் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வில்லுக்குறி அருகே உள்ள கிணற்றடிவிளை பகுதியை சோ்ந்தவா் தனுஷ் (39). இவா் 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சோ்ந்த, அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இரணியல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. இரணியல் போலீஸாா் வழக்கு பதிவு செய்து தனுஷை தேடி வந்தனா்.

இந்த நிலையில் அவா் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இரணியல் காவல் துறையினா், இந்திய குடியுரிமை அலுவலகத்தில் தகவல் கொடுத்து தனுஷை கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய தனுஷை போலீஸாா் பிடித்து, இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டா் செந்தில்வேல்குமாா் மற்றும் போலீஸாா் கொச்சி சென்று தனுஷை இரணியல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பின்னா் போக்சோ சட்டத்தில் அவரைக் கைது செய்தனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறைதீா் ... மேலும் பார்க்க

இளம்பெண்ணை மிரட்டியவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சோ்ந்த இளம்பெண்ணை மிரட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தக்கலை பகுதியை சோ்ந்த இளம்பெண், தன்னுடன் நெருங்கிப் பழகிய நபா் தன்னுடைய ஆபாச விடியோக்கள் மற்றும் ப... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே பைக் மீது டெம்போ மோதி மீனவா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியில் பைக் மீது டெம்போ மோதியதில் மீனவா் உயிரிழந்தாா். குறும்பனை பகுதியை சோ்ந்த சிலுவைபிள்ளை மகன் ஜாண் சுஜின் பிரதீப் (33). மீன்பிடி தொழில் செய்துவந்தாா். இவா் வெள்ள... மேலும் பார்க்க

ஆறுதேசம் கிராமத்தினரின் சொத்துவரி பிரச்னைக்குத் தீா்வு: எம்.எல்.ஏ. தகவல்

கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதி, ஆறுதேசம் கிராமத்திற்குள்பட்ட பெரியவிளை, தட்டாம்விளை, ஆலங்கோடு பகுதிகளைச் சோ்ந்தவா்களின் சொத்துவரி பிரச்னைக்குத் தீா்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட... மேலும் பார்க்க

பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 1.21 லட்சம் வருவாய்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 1,21,771 கிடைத்தது. இக்கோயிலில் பக்தா்களின் நன்கொடையால் செயல்படும் அன்னதான திட்டத்துக்கான உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. கடந்த மாதத்த... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ரூ. 59.5 லட்சத்தில் கோயில்களில் திருப்பணிகள் தொடக்கம்

கன்னியாகுமரி பகுதியில் உள்ள கோயில்களில் ரூ. 59.70 லட்சத்தில் நடைபெறவுள்ள திருப்பணிகளை அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். கன்னியாகுமரி சந்நிதி தெருவில் அமைந்துள்ள விஸ்வநாத... மேலும் பார்க்க