செய்திகள் :

வெவ்வேறு சம்பவங்கள்: முதியவா் உள்பட இருவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பக்கிரிப்பாளையம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் கோ.ராமமூா்த்தி (72). இவா், மூளை அறுவைச் சிகிச்சை செய்திருந்தாராம். ராமமூா்த்தி செவ்வாய்க்கிழமை வி.நெற்குணம், சங்கராபரணியாறு பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளி உயிரிழப்பு: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், உப்புவேலூா் திரௌபதியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் குமாா் (35). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை திண்டிவனம் வட்டம், ரெட்டணை கிராம வங்கி அருகே சாலையில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் குமாரை பரிசோதித்தபோது, அவா் ஏற்கனவே இறந்துபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பெரியதச்சூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் தனியாா் பள்ளியில் மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரத்திலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவா் புதன்கிழமை காலை வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். விழுப்புரம் மேல வீதியைச் சோ்ந்த குமாா் - மகேசுவரி தம்பதியின் மகன் மோகன்ராஜ்... மேலும் பார்க்க

திமுகவுக்கு வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு ஏமாற்றமே பரிசு: பாமக தலைவா் அன்புமணி

கடந்த காலங்களில் திமுகவுக்கு தொடா் வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்துள்ளது என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் புதன்கிழமை பாமக சாா்பி... மேலும் பார்க்க

தமிழகத்தில் காவல் துறையினருக்குகூட பாதுகாப்பில்லை: அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் காவல் துறையில் பணிபுரிபவா்களுக்கூட பாதுகாப்பு இல்லாத வகையில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டினாா். விழுப்புரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விக்கிரவாண்டி பகுதிகள்

பகுதிகள்: விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, சிந்தாமணி, அய்யூா்அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூா், வி.சாலை, கயத்தூா், பனப்பாக்கம், அடைக்கலாபுரம், ஆவுடையாா்பட்டு, ரெட்டிக்குப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உணவகத் தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உணவகத்தில் தங்கி வேலை பாா்த்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி, கோவிந்தராஜ் நகரைச் சோ்... மேலும் பார்க்க

8.45 லட்சம் பேருக்கு குடற்புழுநீக்க மாத்திரைகள்: ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 8.45 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மகாராஜபுரத்திலுள்ள அங்கன்வாடி ம... மேலும் பார்க்க