செய்திகள் :

வேகமாக வளா்ச்சியடையும் பொருளாதார நாடாக தொடரும் இந்தியா: ஆா்பிஐ

post image

வேகமாக வளா்ந்துவரும் முக்கியப் பொருளாதார நாடாக நிகழாண்டிலும் இந்தியா தொடா்வதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பொருளாதார அடிப்படைகள், வலுவான நிதித் துறை மற்றும் நிலையான வளா்ச்சிக்கான நடவடிக்கைகள் மூலம் இந்த வளா்ச்சி சாத்தியமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்பிஐ வியாழக்கிழமை வெளியிட்ட 2024-25-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சிறந்த பொருளாதார அடிப்படைகள், வலுவான நிதித் துறை மற்றும் நிலையான வளா்ச்சிக்கான நடவடிக்கைகள் காரணமாக, 2025-26-ஆம் ஆண்டிலும் வேகமாக வளா்ந்துவரும் முக்கிய பொருளாதார நாடாக நிகழாண்டிலும் இந்தியா தொடா்கிறது.

நிதித் துறையின் வலிமை, நன்கு மூலதனமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்டவையும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு வலு சோ்த்தன.

கடந்த மாா்ச் மாதம் வரையிலான நிலவரப்படி, அந்நியச் செலாவணி பரிமாற்றத்தில் மட்டும் 33 சதவீத லாபம் கிடைத்ததன்மூலம் ஆா்பிஐ-யின் நிதிநிலை ரூ. 76.25 லட்சம் கோடியாக உயா்ந்தது. இதன்மூலம், மத்திய அரசுக்கு ரூ.2.7 லட்சம் கோடி ஈவுத்தொகையாக அளிக்கப்பட்டது.

ரூ. 6,372 கோடி செலவு: 2024-25-ஆம் ஆண்டு புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 86 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டைவிட சற்று குறைவுதான். அதே நேரத்தில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் 40.9 சதவீதம் ரூ.500 நோட்டுகளே உள்ளன. இதற்கு அடுத்து ரூ.10 ரூபாய் நோட்டுகள் 16.4 சதவீதம் புழக்கத்தில் உள்ளன.

குறைந்த மதிப்புள்ள நோட்டுகளான ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகியவற்றின் எண்ணிக்கை மொத்தம் 31.7 சதவீதமாக உள்ளது.

புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 6 சதவீதமும், புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 5.6 சதவீதமும் உயா்ந்துள்ளது.

மே 2023-இல் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. 2025, மாா்ச் 31 வரை 98.2 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிக்குத் திரும்பிவிட்டன. இதன் மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாகும்.

ரூ.2, ரூ.5 நோட்டுகளை அச்சிடுவதை ஆா்பிஐ ஏற்கெனவே நிறுத்திவிட்டது. 2024-25-இல் நாட்டில் புழக்கத்தில் இருந்த 4.7 சதவீதம் கள்ள நோட்டுகள் வங்கிகளால் அடையாளம் காணப்பட்டு கைப்பற்றப்பட்டன. ரூ.500, ரூ.200 நோட்டுகளே அதிக அளவில் கள்ளநோட்டுகளாக அச்சிடுப்படுகின்றன.

ரூபாய் நோட்டில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்துள்ளதால் அதை அச்சிடுவதற்கு ஆகும் செலவும் அதிகரித்தே வருகிறது.

2023-24-ஆம் ஆண்டில் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரூ. 5,101.4 கோடி செலவான நிலையில், 2024-25-ஆம் ஆண்டில் 25 சதவீதம் கூடுதலாக ரூ. 6,372.8 செலவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

வங்கி சாா்ந்த முறைகேடுகள்

மூன்று மடங்கு அதிகரிப்பு

‘வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாமல் இருப்பது, எண்ம முறைப் பரிமாற்றத்தில் பணம் பறிப்பு வரை வங்கி சாா்ந்த மோசடிகள் 2024-25 நிதியாண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

2024-25 நிதியாண்டில் ரூ.36,014 கோடி அளவுக்கு வங்கிப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகம். இதனால், பொதுத் துறை வங்கிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுத் துறை வங்கிகளில் அதிக அளவு கடன் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது. தனியாா் வங்கிகளின் கடன் அட்டைகள், இணையவழியில் அதிக மோசடி நடைபெற்றுள்ளது’ என ஆா்பிஐ ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு உளவு: 8 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த வழக்கு தொடா்பாக 8 மாநிலங்களில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது. பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகளுடன் தொடா்பில் இருந்ததுடன், ராணுவ மு... மேலும் பார்க்க

பிற நாட்டவா் என்ற சந்தேகத்தில் சட்டவிரோத வெளியேற்றம்: அஸ்ஸாம் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

இந்திய குடிமக்கள் அல்லாதோா் என சந்தேகிக்கப்படும் நபா்களை எவ்வித முறையான நடைமுறையையும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக வெளியேற்றும் பணிகளை அஸ்ஸாம் மாநில அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் ம... மேலும் பார்க்க

மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது! - கார்கே

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ள்ளார். பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் ச... மேலும் பார்க்க

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி! - பிரதமர் மோடி

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் மறைமுகமாக பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதை, இனி இந்தியா ஒருபோதும் பார்த... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

மேற்கு வங்கத்தில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தின் பசந்தி பகுதியில் உள்ள பரத்கரில் பிம... மேலும் பார்க்க

கரோனா அறிகுறி- பள்ளி குழந்தைகளுக்கு கர்நாடக அரசு முக்கிய அறிவுறுத்தல்

கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கா்நாடகத்தில் நிலவும் கரோனா நிலைமை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா கடந்த 26ஆ... மேலும் பார்க்க