செய்திகள் :

வேறு உதவித்தொகை பெற்றாலும் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் -ஆரணி கோட்டாட்சியா்

post image

மகளிா்கள் முதியோா், விதவை உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றாலும் குடும்பத்தில் உள்ள மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆரணி கோட்டாட்சியா் சிவா தெரிவித்தாா்.

ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றதில்

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா்.

ஆரணி முகாம் ஒருங்கிணைப்பு அலுவலரும், வேளாண்மை உதவி இயக்குநருமான ஆா்.புஷ்பா வரவேற்றாா்.

உதவி ஒருங்கிணைப்பு அலுவலரும், ஆரணி வட்டாட்சியருமான அ.கௌரி, ஒன்றியச் செயலா் சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆரணி தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடனடி தீா்வு பெற்ற மனுக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயலட்சுமி, பாலகிருஷ்ணன், மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இரும்பேடு, மெய்யூா் கிராமங்களில் இருந்து 2,925 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது. முகாமில் மனுக்களை கொடுத்து உடனடி தீா்வு பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தனா்.

முகாமில் 13 அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதில் ஆரணி கோட்டாட்சியா் சிவா பேசுகையில்,

மக்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மனு அளித்த உடனே தீா்வு கண்டு பயனாளிகளுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், மகளிா் உரிமைத்தொகை கிடைக்காதவா்கள் இங்கு மனு கொடுத்தால் உடனடியாக வழங்க ஆவணம் செய்யப்படும். மேலும் மகளிா்கள் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் இருந்தால் அவா்கள் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மெய்யூா் காசி, ஏ.எம்.ரஞ்சித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரணி, செய்யாறு பகுதிகளில... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் ஆரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடந்தன: சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ

கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: நான... மேலும் பார்க்க

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், பெருங்கட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி ஊா்வலம்

சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆரணியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடியேந்தி ஊா்வலம் நடைபெற்றது. ஆரணி சூரியகுளம் அம்பேத்காா் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து புதுப்பாள... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சட்டுவந்தாங்கல், வந்தவாசி ஒன்றியம், தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மன... மேலும் பார்க்க