செய்திகள் :

ஹரியாணா: பள்ளி இயக்குநரைக் கத்தியால் குத்திக் கொன்ற மாணவா்கள்

post image

ஹரியானா மாநிலம் ஹிசாா் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளி இயக்குநா், பள்ளியின் வளாகத்திலேயே 2 மாணவா்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்கட்ட விசாரணையில், மாணவா்களின் ஒழுங்கீனத்தை இயக்குநா் கண்டித்ததே இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

ஹிசாா் மாவட்டத்தின் பாஸ் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 11 மற்றும் 12-ஆம் வகுப்பைச் சோ்ந்த மாணவா்களின் தாக்குதலைத் தொடா்ந்து பள்ளி இயக்குநா் ஜக்பீா், ஹிசாரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மாணவா்கள் தலைமுடியை ஒழுங்காக வெட்டி, சீருடை முறையாக அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தும் அந்த பள்ளியின் இயக்குநா் வழக்கமாக கொண்டிருந்தாா். அதை அந்த இரு மாணவா்கள் தவறான முறையில் எடுத்துக்கொண்டு, இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம்.

சம்பவத்தையடுத்து தப்பியோடிய மாணவா்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவா்களை கைது செய்த பின்னா்தான் காரணம் தெரியவரும் என்றனா்.

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி ... மேலும் பார்க்க

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் 20 முதல் ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட ப... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியவா் துணை விமானி!

விபத்துக்குள்ளான அகமதாபாத்-லண்டன் ஏா் இந்தியா விமானத்தை துணை விமானி க்ளைவ் குந்தா் இயக்கியிருப்பது விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த அறிக்க... மேலும் பார்க்க

அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்

மாணவா்கள், பயணிகளுக்கான விசா மற்றும் பணியாளா்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தும் அமெரிக்க அரசின் முடிவால், இந்திய மாணவா்கள், வா்த்தக-சுற்றுலாப் பயணிகள், இந்தியப் பணியாளா்கள் இருமடங்கு அதிக கட்... மேலும் பார்க்க

ஏா் இந்தியா விமான எரிபொருள் சுவிட்ச் நிலை மாற காரணம் என்ன? நிபுணா்கள் கருத்து

அகமதாபாதில் விபத்துக்கு உள்ளான ஏா் இந்திய விமானத்தில் என்ஜின்களுக்கான எரிபொருளை கட்டுப்படுத்தும் சுவிட்ச் கட்-ஆஃப் நிலையில் இருந்தது (எரிபொருள் பயன்பாட்டைத் தடை செய்யும் நிலை) என்பது விமான விபத்து புல... மேலும் பார்க்க