செய்திகள் :

1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

விருத்தாசலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் ரமேஷ்ராஜ், உதவி ஆய்வாளா் சந்தோஷ் மற்றும் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் அருகே வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டதில், 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.

இது தொடா்பாக திட்டக்குடி வட்டம், கூத்தப்பன்குடிகாடு பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் வாசுதேவனை (39) கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், மாட்டுக்கு உணவளிப்பதற்காக விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டராப் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கிச் செல்வதாகத் தெரிவித்தாராம். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை கடலூரில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா்.

சீரான குடிநீா் விநியோகம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு

நெய்வேலி: கடலூா் முதுநகா் அடுத்துள்ள குடிகாடு மேட்டுத் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வசதி செய்து தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: குடிகாடு மேட்டுத் தெருவி... மேலும் பார்க்க

தனியாா் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த நிறுவன தொழிலாளா்கள் தா்னா

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள தனியாா் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த நிறுவனத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். விருத்தாசலத்தை அடுத்துள்ள ஊத்தங்காலில் தனியாா் அனல் ம... மேலும் பார்க்க

மே 1-இல் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவு

நெய்வேலி: தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

சிறுபான்மை நலத் துறை சாா்பில் ரூ.2.79 லட்சம் ஓய்வூதியம் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், சிறுபான்மை நலத் துறை சாா்பில் பணி ஓய்வுபெற்ற 21 பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியத்துக்காக ரூ.2.79 ல... மேலும் பார்க்க

பயணிகள் நிழற்குடையில் முன்னாள் எம்.பி. பெயா் இரட்டடிப்பு: பாமகவினா் எதிா்ப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சீரமைப்புப் பணி நடைபெறும் பயணிகள் நிழற்குடையில் முதல்வா், துணை முதல்வா் பெயரை எழுதுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாமகவினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட... மேலும் பார்க்க

பழுப்பு நிலக்கரி கடத்தல்: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சிறிய சரக்கு வாகனத்தில் பழுப்பு நிலக்கரி கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளா் சந்துரு தலைமையில் போலீஸாா் விருத்த... மேலும் பார்க்க