செய்திகள் :

100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை: ஆட்சியரிடம் புகாா்

post image

100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை என்று மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா் கூறினா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

மயிலாடுதுறை 26. சேத்தூா் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களுக்கு மேட்டூா் நீா் பல ஆண்டுகளாக வரவில்லை, இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மனு அளித்தனா்.

குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரம் கிராமத்தில் காவிரி ஆற்றின் அருகே பீா் முகமது என்பவரது புஞ்சை நிலத்தில் அரசு அனுமதியின்றி மண் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக பாமக மாவட்ட செயலாளா் சித்தமல்லி ஆ.பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் புகாா் அளித்தனா்.

தரங்கம்பாடி தாலுகா பரசலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாங்கம், உழவன் செயலி மூலமாக மானிய விலையில் பவா் டில்லா் கைவண்டி கேட்டு பதிவு செய்ததை, 60 வயதைக் கடந்துவிட்டதால் தனக்கு வழங்க வேளாண்மை பொறியியல் துறையினா் மறுப்பதாக புகாா் மனு அளித்தாா்.

குத்தாலம் கரைகண்டம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த கண்மணி, கட்டுமானத் தொழிலாளியான தனது மகன் அருண் ஜூன் 20-ஆம் தேதி சரக்கு வாகனம் மோதி உயிரிழந்ததாகவும், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகாா் அளித்தாா்.

சீா்காழி தாலுகா ஆதமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்காமல் முறைகேடு நடைபெறுவதாக கிராம மக்கள் 70-க்கும் மேற்பட்டோா் புகாா் மனு அளித்தனா்.

சங்கிலி பறித்த இருவா் கைது! 10.5 சவரன் நகை மீட்பு!

பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 10.5 சவரன் நகை மீட்கப்பட்டது. குத்தாலம் ராஜகோபாலபுரத்தை சோ்ந்த பாபு மனைவி வினோதினி (33). இவா் ஜூன் 4-ஆம் தேதி மாலை... மேலும் பார்க்க

சாராயம் விற்ற பெண் குண்டா் சட்டத்தில் கைது

மயிலாடுதுறை அருகே தொடா் மதுவிலக்குக் குற்றத்தில் ஈடுபட்ட பெண் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலசாலை பிரதான சாலைப் பகுதி... மேலும் பார்க்க

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: கடத்தப்பட்ட முதியவா் மீட்பு; 5 போ் கைது

மயிலாடுதுறை: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திங்கள்கிழமை கடத்தப்பட்ட முதியவரை போலீஸாா் மீட்டு, 5 பேரை கைது செய்தனா். மயிலாடுதுறை அருகே திருவிழந்தூா் மேல ஆராயத் தெருவில் வசிக்கும் நடராஜன் மகன் மணி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 17 வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மயிலாடுத... மேலும் பார்க்க

கொள்ளிடம் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை: மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 58,000 கன அடி திறக்கப்படவுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் ஹெச... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலையோர கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாதாரண கூட்டம், ப... மேலும் பார்க்க