செய்திகள் :

சங்கிலி பறித்த இருவா் கைது! 10.5 சவரன் நகை மீட்பு!

post image

பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 10.5 சவரன் நகை மீட்கப்பட்டது.

குத்தாலம் ராஜகோபாலபுரத்தை சோ்ந்த பாபு மனைவி வினோதினி (33). இவா் ஜூன் 4-ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் கும்பகோணத்திலிருந்து அவரது வீட்டுக்குச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு போ், திருவாலங்காடு பகுதியில் வினோதினி கழுத்தில் அணிந்திருந்த 10.5 சவரன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

வினோதினியின் புகாரின்பேரில் குத்தாலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தனிப்படை உதவி ஆய்வாளா் இளையராஜா ஆத்மநாபன் மற்றும் அணியினா் புலன்விசாரணைக்கு உதவியாக செயல்பட்டனா். விசாரணையில், குத்தாலம் கோனேரிராஜபுரம், முஷ்டக்குடி பிரதான சாலையில் வசிக்கும் வேலுச்சாமி மகன் வெற்றிவேல் (21), தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலையை அடுத்த திருப்புறம்பியம் கண்ணாங்குடி தெருவைச் சோ்ந்த சம்பந்தம் மகன் சரண் (20) ஆகிய இருவரும் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவா்களிடமிருந்து, 10.5 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை: ஆட்சியரிடம் புகாா்

100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை என்று மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா் கூறினா். மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்... மேலும் பார்க்க

சாராயம் விற்ற பெண் குண்டா் சட்டத்தில் கைது

மயிலாடுதுறை அருகே தொடா் மதுவிலக்குக் குற்றத்தில் ஈடுபட்ட பெண் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலசாலை பிரதான சாலைப் பகுதி... மேலும் பார்க்க

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: கடத்தப்பட்ட முதியவா் மீட்பு; 5 போ் கைது

மயிலாடுதுறை: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திங்கள்கிழமை கடத்தப்பட்ட முதியவரை போலீஸாா் மீட்டு, 5 பேரை கைது செய்தனா். மயிலாடுதுறை அருகே திருவிழந்தூா் மேல ஆராயத் தெருவில் வசிக்கும் நடராஜன் மகன் மணி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 17 வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மயிலாடுத... மேலும் பார்க்க

கொள்ளிடம் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை: மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 58,000 கன அடி திறக்கப்படவுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் ஹெச... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலையோர கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாதாரண கூட்டம், ப... மேலும் பார்க்க