செய்திகள் :

124 வயது.. நாட் அவுட்! எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் அதிசய பெண் யார்?

post image

பாட்னா: வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டில், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களில் நேற்று தலைப்புச் செய்தியானவர் மிண்டா தேவி.

பிகார் மாநிலம் தரௌந்தா பகுதியைச் சேர்ந்தவர்தான் மிண்டா தேவி. இவரது வாக்காளர் அடையாள அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என்று உள்ளது. இதன்படி, அவரது வயது 124. ஆனால், உலகிலேயே அதிக வயதுடைய நபராக 115 வயதுடைய ஒருவரது பெயர் இடம்பெற்றுள்ளது. எனவே, உலகில் 124 வயதில் மிண்டா தேவி பிகார் மாநிலத்தில் வசித்து வருகிறாரே என்ற கேள்வியும் எழுகிறது.

மிண்டா தேவி

அது மட்டுமல்ல.. 124 வயதில் ஒருவர் உயிரோடு இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. சரி உண்மை என்ன என்று மிண்டா தேவியின் வாக்காளர் பட்டியல் முகவரியைத் தேடிக்கொண்டு ஊடகத்தினர் செல்லத் தொடங்கினர்.

அப்போதுதான் உண்மை வெளியே வந்தது. உண்மையில் மிண்டா தேவிக்கு 124 வயதாகவில்லை. அவரது வயது வெறும் 35. கிட்டத்தட்ட 89 வயது அதிகமாக வாக்காளர் பட்டியலில் பதிவாகியிருக்கிறது. இதற்குக் காரணம் அவரது பிறந்த ஆண்டு 1990. அதற்கு பதிலாக பிழையாக 1900 என்ற பதிவிடப்பட்டதே இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் காரணமாக உள்ளது.

இது பற்றி அவர் பல்வேறு ஊடகங்களுக்கும் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், எனது வாக்காளர் அடையாள அட்டை முழுக்க நிறைய தவறுகள் உள்ளன. எனது வீட்டு முகவரியில்தான், எனது கணவரின் பெயர் இடம்பெற்றுள்ளது என்கிறார்.

அது மட்டுமல்ல, இது தேர்தல் ஆணையத்தின் தவறு. ஆன்லைன் மூலம்தான் விண்ணப்பித்தேன். ஆனால் நான் இப்போது எங்குச் சென்றாலும் என் வயதை கேட்கிறார்கள். செய்திகளில் என் பெயர் வெளியாகும் வரை, எனது வாக்காளர் அடையாள அட்டையில் இப்படி ஒரு தவறு இருப்பதையே நான் பார்க்கவில்லை என்றும் கூறுகிறார்.

இவர் மட்டுமே இப்படி 124 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். பிகாரில் இவரைப் போல 120 வயதிலும், 119 வயதிலும் சிலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்கிறது அதிகாரப்பூர்வ தரவுகள். ஆனால், அலுவலர்கள் இவர்களது இல்லங்களுக்குச் சென்று இவர்களது வயதை உறுதி செய்திருப்பதாகவும், இதுதான் அவர்களது உண்மையான வயது என்றும் தெரிவிக்கிறார்கள்.

உத்தரகண்டில் சாலையின் நடுவில் நிலச்சரிவு! 2 பேர் மாயம்... 2 பேர் படுகாயம்!

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் - நீல்காந்த் சாலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மாயமாகியுள்ளனர்.உத்தரகண்டில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் மன்பூர்-மொஹ்லா-அம்பாகார் சௌக்கி மாவட்டத்தின் மதன்வா... மேலும் பார்க்க

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார். 2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.ம... மேலும் பார்க்க

ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஆக.21 ஆம் தேதியன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு சிங்பம் மாவட்டத்தில், துகுனியா, பொசைடா மற்றும்... மேலும் பார்க்க

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற... மேலும் பார்க்க