செய்திகள் :

2 வது முறையாக அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க கத்தார் பறந்தார் முகேஷ் அம்பானி!

post image

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து 2வது முறையாக அவரைச் சந்திக்க முகேஷ் அம்பானி கத்தார் நாட்டுக்குச் சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு முறைப் பயணமாக கத்தார் நாட்டுக்கு சென்றுள்ளார். அவரைச் சந்திக்க ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி அந்நாட்டு தோஹா நகருக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தோஹாவிலுள்ள லுசைல் மாளிகையில் கத்தார் மன்னர், அதிபர் டிரம்ப்-க்கு இன்று (மே 14) அளிக்கும் அரசு விருந்தில் முகேஷ் அம்பானியும் கலந்துக்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் மிகப் பெரியளவில் அம்பானியின் நிறுவனங்களின் மீது முதலீடு செய்துள்ளன.

இத்துடன், வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதியில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டிருந்தது. ஆனால், தென் அமெரிக்க நாடுகளிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீது அதிபர் டிரம்ப் 25 சதவிகிதம் வரி விதித்ததினால் மார்ச் மாதம் அந்த இறக்குமதி நிறுத்தப்பட்டது.

அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டா ஆகியவை அம்பானியின் டிஜிட்டல் முயற்சிகளில் பங்குகளை வாங்கியுள்ளன.

முன்னதாக, அம்பானி குடும்பம் அதிபர் டிரம்ப்-ன் குடும்பத்துடன் நெருங்கிய உறவை பகிர்ந்து வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும், பதவியேற்புக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விருந்தாளிகளுக்கு டிரம்ப் வழகிய விருந்தில் அம்பானி குடும்பம் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: போர்களின் முடிவுக்கு உலகத் தலைவர்களுக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார்! புதிய போப்!

ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்?, எந்த வி... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப... மேலும் பார்க்க

பாதசாரிகளுக்கு நடைபாதை: மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நடைபாதைகளில் ஆக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவா்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணையம் கவலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலஅபகரிப்பு கும்பலால் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது குறித்து அந்நாட்டு மனித ... மேலும் பார்க்க

‘அவசியமற்ற இடைவேளைகள் எடுக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள்’- செயல்திறன் தணிக்கைக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவ்வப்போது புகாா்கள் வருவதாகவும், சிலா் பணிநேரங்களில் அவசியமற்ற இடைவேளைகளை எடுப்பதாகவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது. மேலும், ‘உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ரத்து

துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த ந... மேலும் பார்க்க