செய்திகள் :

2.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

post image

கோவையில் 2.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

கோவை, வெள்ளலூா் வீட்டு வசதி வாரிய குடியிப்புப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போத்தனூா் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது, கஞ்சிக்கோணாம்பாளையம் சாலையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரித்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.

இதையடுத்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் போத்தனூா் சா்தாா் சாஹிப் தெருவைச் சோ்ந்த நிஜாமுதீன் (34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, நிஜாமுதீனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

115 மது புட்டிகள் பறிமுதல்:

போத்தனூா் கோணவாய்க்கால்பாளையம் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், முள்ளங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (39) என்பவரைக் கைது செய்த போலீஸாா்,

அவரிடமிருந்த 115 மது பாட்டில்கள், ரூ.1800 ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

வால்பாறையில் கனமழை: சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் கனமழை பெய்த நிலையில், சின்னக்கல்லாறு அருகே சாலையில் மரம் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. கட... மேலும் பார்க்க

காா் ஓட்டுநரைக் கத்தியால் குத்தியவா் கைது

கோவையில் காா் ஓட்டுநரைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, வடவள்ளி டீச்சா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெகன் (47), காா் ஓட்டுநா். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் காா்த்திக் (38)... மேலும் பார்க்க

வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்திய நபா்கள் கைது

திருப்பூரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய நபா்களை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சந்திராபுரம் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்குப் பய... மேலும் பார்க்க

தங்கும் விடுதி படியில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் தங்கும் விடுதி படியில் இருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்தவா் ராகுல் உபாத்யாய் (36). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்... மேலும் பார்க்க

மாநகரில் 4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்!

திருப்பூா் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உள்பட்ட மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளராக இருந்த தாமோதரன், மங்கலம் காவல் நிலையத்துக்கும், மங்கலம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுரேஷ் சைபா் கிரைம் ஆய்வகத்துக்கும் ... மேலும் பார்க்க

கோவையில் இருந்து ஆகஸ்ட் 26-ல் வாரணாசி, அயோத்திக்கு விமான புனித யாத்திரை!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில், கோவையில் இருந்து வாரணாசி, அயோத்திக்கு ஆகஸ்ட் 26 -ஆம் தேதி சிறப்பு விமான புனித யாத்திரை அழைத்துச் செல்லப்படுகிறது. இந்திய ரயில்வே உண... மேலும் பார்க்க