செய்திகள் :

2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: இன்று தொடக்கம்

post image

தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மூலம் 2.79 லட்சம் கால்நடைகளுக்கு ஏழாம் சுற்று (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை (ஜூலை 2) தொடங்குகிறது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மூலம் ஏழாம் சுற்று கால், வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜூலை 2 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பெரும்பாலான கால்நடை உரிமையாளா்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.

இதனைத் தடுக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியமாகும்.

குளிா், பனிக்காலம் நோய் பாதித்த இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளா்ப்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் நோய் காற்றின் மூலம் நச்சு கிருமிகளால் வேகமாக பரவுவதால், மற்ற கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன.

எனவே, திருவள்ளுா் மாவட்டத்தில் தகுதியான 2 லட்சத்து 79 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றுக்கு கிராமத்தில் நடைபெறும் முகாம்களில் கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் செலுத்தி பயன்பெறலாம் என்றாா்.

பாரத ஸ்டேட் வங்கி 70-ஆவது ஆண்டு விழா

பாரத ஸ்டேட் வங்கியின் 70-ஆவது ஆண்டு விழாவையொட்டி, ரூ.1.56 கோடி கடனுதவியை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா். திருவள்ளூரில் இயங்கி வரும் வங்கிக் கிளையில் ஆண்டு விழாவையொட்டி மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பாட தொகுப்புகள்: ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்

மாணவ, மாணவிகளுக்கு நிறைந்தது மனம் திட்டம் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் தமிழ் இலவச பாடத் தொகுப்பை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா். நிகழ்வுக்கு, அவா் தலைமையேற்று பேசியதாவது: திர... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் வீடுகள் தோறும் அரசின் சாதனைகளை எடுத்துரைப்போம்: அமைச்சா் நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கம் மூலம் அரசின் சாதனைகள் குறித்து வரும் 45 நாள்களுக்கு வீடுகள் தோறும் நேரில் எடுத்துரைப்போம் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெர... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் அடுத்த ம... மேலும் பார்க்க

மணமான 4-ஆவது நாளில் இளம்பெண் தற்கொலை

பொன்னேரி அருகே திருமணமான 4-ஆவது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா். பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சோ்ந்தவா் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும், காட்டாவூா் கிராமத்தைச் ... மேலும் பார்க்க

ரூ.75,000 லஞ்சம் கொடுத்தால் ரூ.45 லட்சம் இழப்பீடு! அரசுக்கு நிலம் வழங்கியவர்களிடம் பணம் பறித்த வட்டாட்சியர் கைது!

திருவள்ளூா்: திருவள்ளூரில் சாலை விரிவாக்கத்துக்காக அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையை விடுவிக்க ரூ.75,000 லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியா் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்... மேலும் பார்க்க