செய்திகள் :

2026-க்குள் நக்சல் இயக்கம் முற்றிலும் அழிக்கப்படும்: அமித் ஷா

post image

2026 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் நக்சல் இயக்கம் முற்றிலும் அழிக்கப்படும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (மே 26) உறுதிபடத் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்துக்கோ, மக்களுக்கோ, எல்லைகளிலோ இனி யார் அச்சுறுத்தல் கொடுக்க நினைத்தாலும் அதற்கான கடும் விளைவை அவர்கள் சந்திக்கக் கூடும் எனவும் குறிப்பிட்டார்.

மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரத்தை நான்தேட் பகுதியில் அமைச்சர் அமித் ஷா இன்று (மே 26) தொடங்கினார்.

அப்போது நாட்டின் பாதுகாப்பு குறித்தும் வளர்ச்சி குறித்தும் அமைச்சர் அமித் ஷா பேசினார்.

இதில், அமித் ஷா பேசியதாவது,

''இந்திய எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் அதன் மக்களைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நாட்டின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசமில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் வலுவான நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது.

2047-க்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் நிதானமாகப் பயணித்து வருகிறோம். இதில், எங்களை நிலைகுலையச் செய்யும் எந்தவொரு முயற்சிகளுக்கும் கடுமையான பதிலடி இருக்கும்.

சமீபத்தில் உரி பகுதியில் நம்மைத் தாக்கினார்கள். அவர்களுக்கு சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலம் பதிலடி கொடுத்தோம். புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்தினார்கள். அவர்களுக்கு வான்வழித் தாக்குதல் கொடுத்தோம். சமீபத்தில் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.

இந்தியாவில் இருந்து நக்சல் இயக்கத்தை ஒழிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், மேலும், மார்ச் 31, 2026 க்குள் அதை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருவதே எங்கள் இலக்கு.

சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் பாலாசாஹேப் தாக்கரே இருந்திருந்தால், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடியை அவர் கட்டியணைத்திருப்பார். ஆனால், பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்த வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட குழுவை தற்போதைய சிவசேனையினர் முட்டாள்தனமாக விமர்சிக்கின்றனர்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பாகிஸ்தானை பயங்கரவாதத்தில் இருந்து மீட்க வேண்டும்: மோடி

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க