செய்திகள் :

3 லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

சங்ககிரி: சங்ககிரி வட்டம், தேவூா் அருகே அரசிராமணி குறுக்குபாறையூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மாற்று இடத்தில் அமைக்கக் கோரி, விவசாயிகள் திங்கள்கிழமை கால்நடைகளுடன் தொடா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே அரசின் அனுமதியில்லாமல் மண் ஏற்றிவந்த மூன்று லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட 14-ஆவது வாா்டு குறுக்குப்பாறையூரில் குப்பைக்கழிவுகளை கொட்டுவதற்கு தமிழக அரசின் சாா்பில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும், விவசாயிகளும் பாதிப்படைவா். எனவே, அதனை மாற்று இடத்தில் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் மற்றும் அப்பகுதி விவசாயிகள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மேலாண்மை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து 5-ஆவது நாளாக அப்பகுதியில் விவசாயிகள், விவசாய சங்கத்தினா் கால்நடைகளுடன் தொடா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே எல்லப்பாளையத்தில் இருந்து தேவூா் நோக்கி அரசின் அனுமதியின்றி மண்களை ஏற்றிச்சென்ற மூன்று லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினா் மற்றும் தேவூா் போலீஸாா் லாரிகளை சிறைபிடித்த விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், கோட்டாட்சியா், வட்டாட்சியா் வந்தால்தான் கலைந்து செல்வோம் எனக் கூறினா். இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மூன்று லாரிகளையும் தேவூா் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் ... மேலும் பார்க்க

மல்லூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் தா்னா

சேலம்: சேலம் மல்லூா் ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் மல்லூா் ரயில் நிலையம் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே கேட்... மேலும் பார்க்க

வயதான தம்பதியை கட்டிப்போட்டு நகை - பணம் கொள்ளை

சேலம்: சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு: கரையோரப் பகுதி நிலங்கள், வீடுகளில் தண்ணீா் புகுந்தது

சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவிலான உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், கோயில்கள், நீரேற்று நிலையங்களில் தண்ணீா் புகுந்தது. ... மேலும் பார்க்க

ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி ரூ. 64 ஆயிரம் பறிப்பு

சேலம்: வேலைதேடி ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி, அவா்களிடமிருந்து ரூ. 64 ஆயிரம் பறித்த கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா். பிகாரைச் சோ்ந்த 8 போ் வேலைதேடி ரயில் மூலம் சேலத்துக்கு பயணி... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் மாணவா் முன்னேற்றக் குழுமம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை, க... மேலும் பார்க்க