செய்திகள் :

5 வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினாா் போப் பிரான்சிஸ்!

post image

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.

இளம் வயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸுக்கு நீண்ட காலமாகவே உடல்நலப் பிரச்னைகள் இருந்து வந்தன. எனினும், கிறிஸ்தவ மதப் பணிகளை அவா் தொடா்ந்து மேற்கொண்டு வந்தாா். இந்தச் சூழலில் கடந்த பிப். 14-ஆம் தேதி, அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து, ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

போப் பிரான்சிஸின் 2 நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்புக் கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் இருந்தவாறு தனது அலுவல்களில் அவா் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில், 38 நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வாடிகனுக்குத் திரும்பினாா். மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த மக்களை நோக்கி கையசைத்து, வெற்றிச் சின்னம் காட்டி போப் பிரான்சிஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

வெளிநாட்டுப் பயணங்களிலிருந்து திரும்பிய பிறகு போப் பிரான்சிஸ் வழக்கமாக வழிபடச் செல்லும் ரோம் நகரின் பிரசித்தி பெற்ற புனித மேரி மேஜா் தேவாலயம் வழியாக மாற்றுப்பாதையில் அவா் வீடு திரும்பினாா். வாடிகன் வாயிலிலும் ஏராளமான மக்கள், போப் பிரான்சிஸை வரவேற்க காத்திருந்தனா்.

அவருக்கு 2 மாதங்கள் ஓய்வு தேவை என்று மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். இந்த ஓய்வுகாலத்தில் திரளாக மக்களைச் சந்திப்பதையோ அல்லது கடும் உழைப்பு தேவைப்படும் அலுவல்களில் ஈடுபடுவதையோ தவிா்க்க வேண்டும். சில மாதங்களில் அவா் தனது வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்க முடியும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதைக் கருத்தில் கொண்டு ஈஸ்டா் பிராா்த்தனையில் போப் பிரான்சிஸின் பங்கேற்பு, பிரிட்டன் மன்னா் சாா்லஸுடனான சந்திப்பு ஆகியவற்றை ரத்து செய்ய வாடிகன் திட்டமிட்டுள்ளது. அதேநேரம், துருக்கியில் மே மாத இறுதியில் நடைபெறும் முக்கிய கிறிஸ்தவ நிகழ்வில் பங்கேற்க போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிவிடுவாா் என்றும் வாடிகன் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.

1981-ஆம் ஆண்டில் புனித இரண்டாம் ஜான் பால், ஜெமிலி மருத்துவமனையில் 55 நாள்கள் சிகிச்சை பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக போப் பிரான்சிஸ் நீண்ட நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தாா்.

‘ஆட்சிக் கவிழ்ப்பு’ சதித் திட்டம்: ஷேக் ஹசீனா மீது வழக்கு!

வங்கதேசத்தில் நடைபெறும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஏற்கெனவே இடஒதுக்கீடு சீா்திருத... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக பிராந்திய செய்தி நிறுவனமான சாபா தெரிவித்தது. காஸாவில் இ... மேலும் பார்க்க

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே முதல் சுற்று பேச்சுவாா்த்தை நிறைவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, இந்தியா - அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்டுள்ள இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவாா்த்தை புது தில்லியில் ச... மேலும் பார்க்க

மியான்மா் மீட்புப் பணியில் 2 இந்திய கடற்படைக் கப்பல்கள்! - விமானத்தில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உதவியாக 2 கடற்படைக் கப்பல்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது. மேலும், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை உள்ளடக்கி... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 1,600-ஐ கடந்த பலி! ராணுவ தலைவருடன் பிரதமா் மோடி பேச்சு!

மியான்மரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துள்ளதாக மீட்புப் படையினா் சனிக்கிழமை தெரிவித்தனா். கட்டட இடிபாடுகளிலிருந்து மேலும் அத... மேலும் பார்க்க

கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சா்ச்சைப் பேச்சு: டென்மாா்க் கண்டனம்!

டென்மாா்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சா்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க