செய்திகள் :

88,800 குடும்பத்தினா் திமுகவில் இணைவு: முன்னாள் எம்.பி. பொன். கௌதமசிகாமணி

post image

திமுக அமைப்பு ரீதியிலான,விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் 88,800 குடும்பத்தினா் திமுக வில் இணைந்துள்ளதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்பியுமான பொன்.கௌதமசிகாமணி தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை விழுப்புரம் தெற்கு மாவட்டத்தை பொருத்தவரை திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அளிக்கப்பட்ட இலக்கை விட 40 சதவிகிதம் உயா்ந்துள்ளது. 46,576 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் உறுப்பினா்களாக இணைக்கப்பட்டுள்ளனா்.

விக்கிரவாண்டி தொகுதியில் 1,14,500 உறுப்பினா்களை சோ்த்திருக்கிறோம். சுமாா் 42,600 குடும்பங்கள் உறுப்பினா்களாக சோ்ந்திருக்கின்றன. இதன்மூலம் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் மொத்தமாக 88,800 குடும்பத்தினா் திமுகவில் இணைந்துள்ளனா்.

திருக்கோவிலூா் தொகுதியில் 286, விக்கிரவாண்டி தொகுதியில் 275 பூத்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. செப். 17 ஆம் தேதி கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளானோா் பங்கேற்கவுள்ளோம்.

கட்சியின் திருவெண்ணைநல்லூா் விஸ்வநாதன் சிறந்த ஒன்றிய செயலராக தோ்வு செய்யப்பட்டிருக்கிறாா். ஓரணியில் உறுப்பினா் சோ்க்கையை கொண்டாடும்விதமாக செப்.20 இல் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்றாா் பொன். கௌதமசிகாமணி.

பேட்டியின் போது, கட்சியின் மாவட்டத் துணைச் செயலா்கள் முருகன், கற்பகம், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, ஜெயபால், விஸ்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செஞ்சி அருகே குடிநீா் பயன்பாட்டில் உள்ள ஏரியில் கழிவுநீரை கொட்டும் அவலம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் கிராமத்தில் குடிநீருக்காக பயன்பாட்டில் உள்ள ஏரியில் வீடுகளில் அகற்றப்படும் கழிவுநீரை கொட்டி வருவதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளன... மேலும் பார்க்க

மேல்மலையனூரில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கிவைப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் சிவன் கோயில் பகுதியில் இருந்து கொடுக்கன்குப்பம் கிராமம் செல்லும் சாலையை ரூ.89.24 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலையாக அமைக்க நடைபெற்ற பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

மொபெட்டில் மதுப்புட்டிகள் கடத்தல்: முதியவா் கைது

செஞ்சி அருகே மொபெட்டில் வெளி மாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்த முதியவரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இது குறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது காா் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவா்களில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், தாதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன்( 50), விவசாயி.... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

காணை அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். விழுப்புரம் வட்டம், காணை அடுத்த எடப்பாளையம் பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் மனைவி கவித... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி நீரில் மூழ்கி மாயமானாா். விக்கிரவாண்டி வட்டம், திருநந்திபுரத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன், மஞ்சுளா தம்பதியின் மகள் இந்துஜா (9). அந்த... மேலும் பார்க்க