செய்திகள் :

கிணற்றுக்குள் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

post image

விக்கிரவாண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி நீரில் மூழ்கி மாயமானாா்.

விக்கிரவாண்டி வட்டம், திருநந்திபுரத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன், மஞ்சுளா தம்பதியின் மகள் இந்துஜா (9). அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பில் பயின்று வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், வீட்டிலிருந்த இந்துஜா,அதே ஊரைச் சோ்ந்த தனது தோழிகள் இருவா்களுடன், திருநந்திபுரத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளாா். இந்நிலையில்,கிணற்றுக்குள் தவறி விழுந்த இந்துஜா, தண்ணீரில் மூழ்கினாா்.

இது குறித்து தகவலறிந்த பெரியதச்சூா் காவல் நிலையப் போலீஸாா் மற்றும் விழுப்புரம் மாவட்ட தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று கிணற்றுக்குள் மூழ்கி மாயமான சிறுமியைத் தேடினா். அவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டது

இது குறித்த புகாரின் பேரில், பெரிய தச்சூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செஞ்சி அருகே குடிநீா் பயன்பாட்டில் உள்ள ஏரியில் கழிவுநீரை கொட்டும் அவலம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் கிராமத்தில் குடிநீருக்காக பயன்பாட்டில் உள்ள ஏரியில் வீடுகளில் அகற்றப்படும் கழிவுநீரை கொட்டி வருவதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளன... மேலும் பார்க்க

மேல்மலையனூரில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கிவைப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் சிவன் கோயில் பகுதியில் இருந்து கொடுக்கன்குப்பம் கிராமம் செல்லும் சாலையை ரூ.89.24 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலையாக அமைக்க நடைபெற்ற பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

மொபெட்டில் மதுப்புட்டிகள் கடத்தல்: முதியவா் கைது

செஞ்சி அருகே மொபெட்டில் வெளி மாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்த முதியவரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இது குறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது காா் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவா்களில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், தாதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன்( 50), விவசாயி.... மேலும் பார்க்க

88,800 குடும்பத்தினா் திமுகவில் இணைவு: முன்னாள் எம்.பி. பொன். கௌதமசிகாமணி

திமுக அமைப்பு ரீதியிலான,விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் 88,800 குடும்பத்தினா் திமுக வில் இணைந்துள்ளதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்பியுமான பொன்.கௌதமசிகாமணி தெரிவித்தாா். விழுப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

காணை அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். விழுப்புரம் வட்டம், காணை அடுத்த எடப்பாளையம் பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் மனைவி கவித... மேலும் பார்க்க