செய்திகள் :

Doctor Vikatan: `50 வயதில் திடீர் மூச்சுத்திணறல்.. கொரோனா வந்தவர்களுக்கு இப்படி வருமா?'

post image

Doctor Vikatan:  நான் 50 வயதுப் பெண். ஆக்டிவ்வாக இருக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் எனக்கு திடீரென மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டது. ஒருவித அசௌகர்யமான உணர்வு ஏற்படவே, ஹார்ட் அட்டாக் அறிகுறி என நினைத்து மருத்துவரிடம் போனேன். இசிஜி எடுத்துப் பார்த்து பிரச்னை இல்லை என்றார்.

பிறகு மூச்சு சம்பந்தமான பிரச்னையாக இருக்கலாம் என நுரையீரல் மருத்துவரையும் பார்த்தேன். அவரும் பிரச்னை இல்லை என்றார். ஆனால், கொரோனா வந்தவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் வருவதாகவும் சொன்னார். இதை எப்படிப் புரிந்துகொள்வது...?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

அருண் கல்யாணசுந்தரம்

அறிகுறிகளை உணர்ந்ததும் உடனடியாக மருத்துவரை அணுகிய செயல் பாராட்டத்தக்கது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு 'லாங் கோவிட் சிண்ட்ரோம்' (long covid syndrome) என்ற பாதிப்பு வருவது பற்றி கொரோனா காலத்திலேயே நிறைய பேசியிருக்கிறோம். 

அதாவது கோவிட் வந்து குணமானவர்களாக இருப்பார்கள். நுரையீரல், இதயம் எல்லாம் நார்மலாக இருக்கும். ஆனாலும் ரொம்பவே பலவீனமாக இருப்பதாகச் சொல்வார்கள். களைப்பாக உணர்வார்கள். ஒரு மாடி ஏறினாலே நெஞ்சை அடைப்பது போலிருப்பதாகச் சொல்வார்கள். தூக்கம் வரவில்லை என்பார்கள். படபடப்பு, பதற்றம் இருக்கும். மொத்தத்தில் ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பார்கள். இந்த அறிகுறிகளைப் பார்த்துவிட்டு  சம்பந்தப்பட்டவர்களுக்கு மனரீதியாக ஏதோ பிரச்னை என்றே அவரை சார்ந்தவர்கள் நினைப்பார்கள். சம்பந்தமே இல்லாத அறிகுறிகளாகப் பார்ப்பார்கள்.

கோவிட் வந்து குணமானவர்களாக இருப்பார்கள். நுரையீரல், இதயம் எல்லாம் நார்மலாக இருக்கும். ஆனாலும் ரொம்பவே பலவீனமாக இருப்பதாகச் சொல்வார்கள்

ஆனால், கொரோனா பாதித்து குணமானவர்களுக்கு இத்தகைய அறிகுறிகள் தென்படுவதை 'லாங் ஹாலர்ஸ் அல்லது 'லாங் கோவிட்' என்றும் இந்த அறிகுறிகள் கொரோனாவிலிருந்து குணமானதிலிருந்து மூன்று மாதங்கள் வரை நீடிக்கலாம் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வைரஸ் உருவாக்கும் வீக்கமே இதற்கு காரணம்.  உலகம் முழுவதிலும் காணப்படுகிற லாங் கோவிட் பிரச்னையிலிருந்து  இவர்கள் குணமாக தாமதமாகலாம்.  கொரோனா தொற்றுக்குள்ளான எல்லா வயதினருக்கும் இந்த அறிகுறிகள் பாதித்தாலும் 40-60 வயதுக்காரர்களுக்கு சற்று அதிகம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள், சுவாசப்பாதை தொற்றின் காரணமாகவோ, வீக்கம் காரணமாகவோ ஏற்பட்டதாகவும் இருக்கலாம். வேறு பிரச்னைகளாகவும் இருக்கலாம். நீங்கள் சாதாரண இசிஜி, எக்கோ பரிசோதனைகளை மட்டும் பார்த்துவிட்டு, இது இதயம் தொடர்பான பிரச்னை இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. எனவே, நீங்கள் இதயநல மருத்துவரை அணுகி, முழுமையான பரிசோதனைகளைச் செய்து பார்த்து உறுதிசெய்வதுதான் சரியானது. வேறு ஏதேனும் ரிஸ்க் காரணிகள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.

இதயநல மருத்துவரை அணுகி, முழுமையான பரிசோதனைகளைச் செய்து பார்த்து உறுதிசெய்வதுதான் சரியானது.

மருத்துவர் பார்த்துவிட்டு, உங்களுக்கு டிரெட்மில் டெஸ்ட், இதயத்துக்கான ஸ்கேன் போன்றவை தேவையா என்று சொல்வார். அதே சமயம், இந்தப் பிரச்னை கொரோனா தொற்றுக்குப் பிறகான பாதிப்பாகவும் இருக்கக்கூடும். எனவே, மருத்துவரை அணுகி, முழுமையான பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Tanzania: 3,000 ஆண்டுகள் பழமையான மரங்கள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு, தான்சானியா. இங்கு, இதுவரை மனிதர்களால் பார்க்கப்படாத, சுமார் 3000 ஆண்டுகள் பழமையான மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் போது, இத்தாலிய... மேலும் பார்க்க

`5 லட்சம் மலர் செடிகள் பூத்து, கண்களுக்கு விருந்து படைக்கும்..' - சீசனுக்கு தயாராகும் ஊட்டி பூங்கா

ஊட்டியில் தேனிலவு சீசன் எனப்படும் இரண்டாம் கட்ட சீசன் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. மே மாத கோடை சீசனுக்கு அடுத்தபடியாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடத்தப்படும்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அரசு வேலை' ஆசை காட்டி மோசடி; சுருட்டிய பணத்தில் சமூக ஆர்வலராக வலம் வந்த பாஜக பிரமுகர்!

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சி... மேலும் பார்க்க

`அரசியலில் எங்கோ, ஏதோ ஒன்று நடக்கிறது..' -ஜக்தீப் தன்கர் ராஜினாமா குறித்து காங். தலைவர் ஹரிஷ் ராவத்

நேற்று துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இது குறித்து உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத், "இந்த செய்தி மிகவும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

US: மார்டின் லூதர் கிங் கொலை ஆவணத்தை வெளியிட்ட ட்ரம்ப் அரசு; அவரது மகன், மகள் கூறுவது என்ன?

மார்டின் லூதர் கிங் - அமெரிக்காவின் சிவில் உரிமை ஆர்வலர்.டென்னசி மெம்பிஸில், 1968-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மார்டின் லூதர் கிங் சுட்டு கொல்லப்பட்டார்.இவரது கொலை சம்பந்தமான ஆவணத்தை நேற்று ட்ரம்ப் அரசாங்கம... மேலும் பார்க்க