செய்திகள் :

Kerala Nurse: ``பிளட் மணி வேண்டாம்; தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்..'' - ஏமன் குடும்பம் சொல்வதென்ன?

post image

ஏமனில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்காக கிராண்ட் முஃப்தி ஷேக் காந்தபுரம் ஏ.பி ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நிமிஷா பிரியா
நிமிஷா பிரியா

பிளட் மணி!

ஏமன் அடிப்படையில் இஸ்லாமிய ஷரியா சட்டப்படி இயங்குகிறது. ஷரியா சட்டத்தின் படி, தெரியாமல் நடந்த ஒரு குற்றத்திற்கு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு குற்றவாளி 'பிளட் மணி' வழங்கலாம். இது பாதிக்கப்பட்டவரின் குடும்பம் ஒத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம்.

நிமிஷாவை பிளட் மணி கொடுப்பது மூலம் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது.

கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் கூறுவது என்ன?

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட தலால் அப்​தோ மெஹ்​தியின் சகோதரர் அப்​தெல்ஃபத்தா மெஹ்தி, "உண்மையை மறக்க முடியாது. தண்டனை தாமதமானாலும், அதை ரத்து செய்ய முடியாது.

எந்தவொரு நஷ்ட ஈடும் உயிரை ஈடு செய்ய முடியாது. நீதி வெல்ல வேண்டும்.

தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. நாங்கள் எந்தவித அழுத்தத்திற்கும், பிளட் மணிக்கு அடிப்பணிய மாட்டோம்.

கடவுளின் அருளால், தண்டனை நிறைவேற்றப்படும்" என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால், 'இந்திய அரசின் முயற்சி என்ன ஆகும்?' என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

பல்லடம் மூவர் கொலை வழக்கு: 8 மாதங்களுக்குப் பின் கிணற்றில் இருந்து செல்போன் மீட்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்புதூர் தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி வீட்... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்; 4 நாள்களுக்குப் பிறகு 3 பேர் கைது!

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில... மேலும் பார்க்க

குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துற... மேலும் பார்க்க

நாமக்கல்: தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக் கொலை; சரக்கு லாரி டிரைவரைக் கைதுசெய்த போலீஸ்!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (45). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; பண மோசடி - ஜிம் பயிற்சியாளர் சிக்கிய பின்னணி!

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அசோக் நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு ப... மேலும் பார்க்க

மருத்துவமனையில் நுழைந்து நோயாளி சுட்டுக் கொலை; திரைப்பட பாணியில் நடந்தேறிய கொடூரம்- பீகார் அதிர்ச்சி

பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்ததடுத்து படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க பிரமுகர், தொழிலதிபர் என கொலைகள் பட்டியல் நீண்டுகொண்... மேலும் பார்க்க