செய்திகள் :

OPS: ``ஏற்கெனவே முதல்வருடன் தொடர்பில் இருந்தால்தான்" - ஓபிஎஸ் அறிக்கைக்கு நயினார் நாகேந்திரன் பதில்

post image

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், அவருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டதே தனக்குத் தெரியாது என்றார் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். மேலும் அவர் கேட்டுக்கொண்டால் பிரதமரிடம் நேரம் வாங்கித் தருவதாகக் கூறினார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இந்தச் சூழலில், "நயினார் நகேந்திரன் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறுவதை நிறுத்த வேண்டும். நயினார் நாகேந்திரனை ஆறு முறை கைப்பேசியில் தொடர்புகொள்ள நான் முயன்றேன். ஆனால் அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை.

நயினார் நாகேந்திரனிடம் பேச வேண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் அவர் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை" எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், ``ஓ.பி.எஸ் கடிதம் அனுப்பி இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது. அந்தக் கடிதம் எனக்கு இன்னும் வந்து சேரவில்லை. அந்தக் கடிதம் என்னிடத்தில் வந்து விட்டால், நான் உங்களுக்கு எடுத்துக் காண்பிக்கிறேன். அப்போது யார் உண்மையைச் சொல்லி இருக்கிறார், யார் பொய் சொல்லி இருக்கிறார் என்பது தெரியவந்துவிடும்.

தமிழ்நாட்டு முதல்வரை எடுத்த உடனே நேரடியாகப் பார்த்துப் பேசி விட முடியாது. ஏற்கனவே இருவருக்கும் ஏதேனும் தொடர்பு இருந்தால்தான் நேரில் சந்தித்து ஒரு முடிவெடுத்திருக்க முடியும் என்பது எல்லோருடைய கருத்தது.

ஒபிஎஸ்-சையதுகான்

அதனால் ஓ.பி.எஸ் பற்றிக் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர் முடிவு எடுத்ததற்குக் காரணம் சொல்லுகிறார் அவ்வளவுதான். அவர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலினைச் சந்திப்பதற்கு முதல் நாள் நான்தான் அவரைத் தொடர்பு கொண்டேன்.

இதற்கு முன்னால் சட்டமன்றம் நடக்கும்போது பல நேரங்களில் என்னை அழைத்திருக்கிறார். என்னுடைய உதவியாளர்கள் மூலம் என்னிடம் பேசி இருக்கிறார். எனவே, இப்போது அவர் என் மீது குறை சொல்லிருக்கிறார் நான் அவரைப் பற்றி எந்த குறையும் சொல்ல மாட்டேன்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

IND vs PAK: "இந்திய ராணுவ வீரர்களின் ரத்தத்தை விட முக்கியமா?" - BCCI-ஐ மீது மகா., எம்.பி தாக்கு

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.அந்த எதிர்ப்புகள் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சமீ... மேலும் பார்க்க

தேனி: 'மலைகளில் கிரானைட் குவாரி அமைக்க அனுமதி, ஆனால் மாடு மேய்க்க அனுமதி இல்லையா' - சீமான் கேள்வி

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடியில் உள்ள அடவுப்பாறை வனப்பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட... மேலும் பார்க்க

Shashi Tharoor: "என் சொந்தக் கட்சியின் தலைவர்..." - ராகுல் காந்தியுடனான முரண்பாடு குறித்து விளக்கம்

"இந்தியா ஒரு இறந்த பொருளாதாரம்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதும், அதை ஆமோதிக்கும் வகையில் ராகுல் காந்தி கருத்து கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் ராகுல் காந்தியின் பார்வைக்கு மாறாக... மேலும் பார்க்க

பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" - வானதி சீனிவாசன் உறுதி

கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “கோவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே, விமான போக்குவரத்து, குறு சிறு தொழில் துறை மத்திய அம... மேலும் பார்க்க

"ஸ்டாலினுக்குத் தெரியும் நான் மானஸ்தன் என்று" - திமுகவில் இணைவது குறித்து பதிலளித்த ஜெயக்குமார்

தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றான. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் ஆதிமுகவினர் சிலருக்கே விருப்பம் இல்லை எனக் கூறப்பட்டுவந்தது.அந்த வகையில் அதிம... மேலும் பார்க்க