செய்திகள் :

Pawan Kalyan: ``திரைப்படங்களைப் பற்றி பேசுவதற்கு தயங்குவேன்; அது ஆணவம் கிடையாது.." - பவன் கல்யாண்

post image

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரி ஹர வீர மல்லு' இம்மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

ஹரி ஹர வீரமல்லு படத்தில்...
ஹரி ஹர வீரமல்லு படத்தில்...

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பவன் கல்யாண் பங்கேற்க மாட்டார் என இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அறிவித்திருந்தார்.

ஆனால், திடீரென இன்று நடைபெற்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டு பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

அங்கு பேசிய பவன் கல்யாண், " என் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தை உருவாக்க எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை உலகுக்கு சொல்ல வேண்டும் என்பதுதான் இன்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு நான் வந்ததற்கு காரணம்.

நான் அவருக்கு பக்கபலமாக நின்று, அவர் எனக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை உலகுக்கு உரைக்க விரும்பினேன். படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழுவினர் தனியாக செய்ததற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Pawan Kalyan
Pawan Kalyan

என் அட்டவணை அரசியல் பணிகளால் நிரம்பியிருந்தது. 'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் ப்ரோமோஷன் பணிகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்ட நிதி அகர்வாலுக்கு நான் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

சமீபத்தில் ஊடகங்களுடன் அரசியல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறேன், ஆனால் என் திரைப்படங்களைப் பற்றி இவ்வளவு பேசியதில்லை. பொதுவாக, திரைப்படங்களைப் பற்றி பேசுவதற்கு நான் தயங்குவேன். இது என் ஆணவம் கிடையாது.

என் படங்களை எப்படி விளம்பரப்படுத்துவது, பேசுவது என்று எனக்குத் தெரியாது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். ஏ.எம்.ரத்னம் தெலுங்கு திரைப்படங்களை பான்-இந்திய சந்தைகளுக்கு எடுத்துச் சென்றவர்களில் ஒருவர்.

தமிழ்ப் படங்களை தொடர்ந்து டப் செய்து தெலுங்கு சந்தைகளுக்கு பெரிய அளவில் கொண்டு வந்தவர். ஒரு படத்தை உருவாக்க, பொருளாதார ரீதியாகவும் படைப்பு ரீதியாகவும் பல சிறிய போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டும்.

அவரின் அர்ப்பணிப்பைக் கண்டு, என்னால் முடிந்த நேரத்தில் இந்தப் படத்திற்கு என் முழு முயற்சியையும் கொடுத்தேன். இது வெற்றி அல்லது பணத்தைப் பற்றியது அல்ல.

Pawan Kalyan
Pawan Kalyan

கிரிஷ் ஜகர்லமுடி, ஏ.எம்.ரத்னத்துடன் சேர்ந்து இதை ஒரு சிறந்த, உயர்ந்த கருத்து கொண்ட படமாக என்னிடம் கொண்டு வந்தார். சில தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.

இருப்பினும், இந்தப் படத்திற்கு அவர் செய்த அடித்தளப் பணிக்கு நான் மனதார நன்றி கூறுகிறேன். இந்தப் படம் இரண்டு கோவிட் அலைகளை சந்தித்து, சில படைப்பு சவால்களை எதிர்கொண்டது.

அரசியலில் நுழைந்த பிறகு, படப்பிடிப்புக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இருப்பினும், ஏ.எம்.ரத்னம் தொடர்ந்து உழைத்து படத்தை முடித்தார்," எனப் பேசியிருக்கிறார்.

Hari Hara Veera Mallu: "ஔரங்கசீப்பைப் பற்றிப் பேசவில்லை; ஆனால்,.." - பவன் கல்யாண் சொல்வது என்ன?

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் இம்மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பவன் ... மேலும் பார்க்க

Pawan Kalyan: "ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்ததுதான் நான் செய்த ஒரே தவறு!" - பவன் கல்யாண் பளீச்

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரி ஹர வீரமல்லு' படம், நாளை மறுநாள் (ஜூலை 24) வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பவன் கல்யாண் பங்கேற்க... மேலும் பார்க்க

Peddi Update: "RRR படத்தை விட..." - ராம் சரணின் முறுக்கேறிய உடல், நீண்ட முடி, பிரமாண்ட திட்டம்!

'உபேன்னா' படத்தை இயக்கிய இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், சிவ ராஜ்குமார், ஜான்வி கபூர் போன்றோர் 'பெத்தி' படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்கள். நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.... மேலும் பார்க்க

`சலூன் கடைக்காரர் மகன் டு ஆஸ்கர் பாடல்' - ராகுலுக்கு ரூ.1கோடி ஊக்கத்தொகை அறிவித்த தெலங்கானா முதல்வர்

RRR திரைப்படத்தில் வெளியாகி ஆஸ்கர் வென்ற நாட்டு நாட்டு பாடல் மூலம் பிரபலமடைந்த பாடகர் ராகுல் சிப்லிகுஞ்சுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளித்து அறிவித்துள்ளார் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி. மிக... மேலும் பார்க்க

Rajamouli: ̀ ̀என் படங்களில் பாகுபலி, RRR-ஐ விட எனக்குப் பிடித்த படம்..." - ராஜமெளலி ஓப்பன் டாக்

'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' போன்ற திரைப்படங்கள் மூலம் பிரமாண்டத்திற்குப் பெயர்போன இயக்குநராக மாறிவிட்டார் இயக்குநர் ராஜமெளலி. அந்த வரிசையில் மகாபாரதக் கதையை 10 பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூ... மேலும் பார்க்க

keerthy suresh: ``சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன்; அப்போது..." - நடிகை கீர்த்தி சுரேஷ்

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'உப்பு கப்புறம்பு' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் தனியார் நிறுவனத்த... மேலும் பார்க்க