செய்திகள் :

Plane crash: ``அவன் கடைசியாக சொன்ன வார்த்தை..'' - பலியான விமானியின் தந்தை கூறி அழுத சோகம்

post image

அகமதாபாத் விமான விபத்து நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 240-க்கும் மேற்பட்டோர் இந்த கோர விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். அந்த விமானத்தில் பயணித்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்திருக்கிறார்.

விஸ்வாஷ் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனான விஸ்வாஷ் குமார் என்பவர் மட்டும் அவரச வழிக் கதவின் வழியே விமானத்தில் இருந்து குதிக்கு படுகாயங்களுடன் தப்பினார். விமானம் மோதிய கட்டிடத்தில் இருந்தவர்கள் பலர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இறுதி அஞ்சலி

விமான விபத்தின்போது 'Mayday', அதாவது பேராப்பு உதவி வேண்டும் என அறிவித்த விமானத்தின் விமானி சுமீத் சபர்வால் (50) உயிரிழந்தார். DNA ஆராய்ச்சியின் மூலம் தேடி கண்டுபிடிக்கப்பட்ட அவரது உடல் நேற்று (ஜூன் 16) அகமதாபாத்திலிருந்து, அவரது மும்பை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

அப்பகுதியில் இருந்தவர்கள், அரசியல் தலைவர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது மகனின் உடலைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுதபடி பேசியிருக்கும் சுமீத் சபர்வாலின் தந்தை புஷ்கர்ராஜ் சபர்வால், "சுமீத் ஒரு சிறந்த விமானி, நிதானத்தோடும், தெளிவுடனும் செயல்படக் கூடியவர்.

உயிரிழந்த விமானி சுமீத் சபர்வால் மற்றும் அவரது தந்தை

சில நாள்களுக்கு முன்பு, தான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு உடல்நல குறைவுடன் இருக்கும் தந்தையை முழுநேரம் உடன் இருந்து கவனித்துக் கொள்ளப் போவதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இப்படியொரு எதிர்பாராத சோகம் நிகழ்ந்துவிட்டது" என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

விமானி சுமீத் சபர்வாலுக்கு கண்ணீர் மல்க அவரது குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்திய காட்சிகள் பலரின் மனதை உலுக்கியுள்ளது.

Bike Taxi to Bike Parcel: தடைக்குப் பிறகும் தொடரும் ola, Rapido பைக் டாக்ஸி சேவை.. எப்படி?

கர்நாடக மாநிலத்தில் ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகளை ஜூன் 16 ஆம் தேதி முதல் நிறுத்த வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பைக் டாக்ஸி சேவை மக்களு... மேலும் பார்க்க

``1988-ல் நடந்த விமான விபத்து; போதுமான இழப்பீடு வழங்கவில்லை..'' - 37 ஆண்டுகள் போராடும் குடும்பங்கள்

அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமான விபத்து, ஒரு பெரும் சோக நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த கோர விபத்தில் சனிக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்து... மேலும் பார்க்க

Madurai AIIMS: `மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படித்தான் இருக்கும்' - வீடியோ வெளியிட்ட மத்திய அரசு

பிரதமர் மோடியால் கடந்த 2019 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள், இரண்டு மக்களவைத் தேர்தல் முடிந்தும் முடிக்கப்படவில்லை.6 ஆண்டுகளுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனை ... மேலும் பார்க்க

Israel - Iran: "தெஹ்ரானை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு நகருங்கள்" - இந்திய தூதரகம் எச்சரிக்கை

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பாகில் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கிடப்பில் போடப்பட்ட ரவுண்டானா பணி; அச்சத்தில் மக்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 அடி சாலை, அழகேசபுரம் சாலை, கிருஷ்ணராஜபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் டி.எஸ்.ஃஎப் சாலையானது மிகவும் பரபரப்பான பிரதான சாலையாகும். இந்த பிரதான டி.எஸ்.ஃஎப் சாலைய... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களாக பெண்களை இந்தச் சமூகம் மாற்றி வைத்திருப்பதில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆட்சி அதிகார மமதையில், மீண்டும் கற்காலத்துக்கே இந்த அரசியல்வா... மேலும் பார்க்க