டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
Plane crash: ``அவன் கடைசியாக சொன்ன வார்த்தை..'' - பலியான விமானியின் தந்தை கூறி அழுத சோகம்
அகமதாபாத் விமான விபத்து நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 240-க்கும் மேற்பட்டோர் இந்த கோர விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். அந்த விமானத்தில் பயணித்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்திருக்கிறார்.
விஸ்வாஷ் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனான விஸ்வாஷ் குமார் என்பவர் மட்டும் அவரச வழிக் கதவின் வழியே விமானத்தில் இருந்து குதிக்கு படுகாயங்களுடன் தப்பினார். விமானம் மோதிய கட்டிடத்தில் இருந்தவர்கள் பலர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விமான விபத்தின்போது 'Mayday', அதாவது பேராப்பு உதவி வேண்டும் என அறிவித்த விமானத்தின் விமானி சுமீத் சபர்வால் (50) உயிரிழந்தார். DNA ஆராய்ச்சியின் மூலம் தேடி கண்டுபிடிக்கப்பட்ட அவரது உடல் நேற்று (ஜூன் 16) அகமதாபாத்திலிருந்து, அவரது மும்பை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அப்பகுதியில் இருந்தவர்கள், அரசியல் தலைவர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது மகனின் உடலைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுதபடி பேசியிருக்கும் சுமீத் சபர்வாலின் தந்தை புஷ்கர்ராஜ் சபர்வால், "சுமீத் ஒரு சிறந்த விமானி, நிதானத்தோடும், தெளிவுடனும் செயல்படக் கூடியவர்.

சில நாள்களுக்கு முன்பு, தான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு உடல்நல குறைவுடன் இருக்கும் தந்தையை முழுநேரம் உடன் இருந்து கவனித்துக் கொள்ளப் போவதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இப்படியொரு எதிர்பாராத சோகம் நிகழ்ந்துவிட்டது" என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
விமானி சுமீத் சபர்வாலுக்கு கண்ணீர் மல்க அவரது குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்திய காட்சிகள் பலரின் மனதை உலுக்கியுள்ளது.