செய்திகள் :

STALIN-க்கு ஷாக் தரும் 'EPS-ANBUMANI' மூவ்...காப்பாற்றுவாரா E.V VELU?! | Elangovan Explains

post image

'சி.எம் மு.க ஸ்டாலின் உடல்நிலை பரவாயில்லை. பி.பி அதிகமாகியது தான், ஓய்வெடுக்க காரணம்' என்கிறார்கள் திமுக-வினர். இதில் முக்கிய பங்கு மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் தொடங்கி எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனம் வரை, இப்படி பல உள்ளன. முக்கியமாக புதிய புதிய வடிவில் எதிர்க்கட்சிகள் ஆடும் கேம். குறிப்பாக சமுதாய ரீதியிலான கணக்குகள். வன்னியர்களுக்கான 10.5% கையில் எடுத்து விழுப்புரத்தில் பெரும் போராட்டம் நடத்தியுள்ளார் அன்புமணி. தன் தலைமையை சுற்றும் சிக்கல்களை சமாளிக்க, வன்னியர் அரசியலை கையில் எடுத்தவர், இந்த ஓராண்டும் இதையே தீவிரப்படுத்த திட்டம். இன்னொரு பக்கம், '10.5% கொண்டு வந்தது நானே', என்று வாக்குகளை அறுவடை செய்ய திட்டமிட்டு பயணிக்கிறார் எடப்பாடி. பாஜகவும், எப்படியாவது பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து, வெற்றிடமாக இருக்கும் வடமாவட்டங்களில் NDA கூட்டணி-க்கு வலு சேர்த்துவிட நினைக்கிறார்கள். இதை சமாளிக்கும் வகையில் திமுக-வில் பெரிய திட்டங்கள் இல்லை. இது, எந்தவகையில் திமுகவை பாதிக்கும் என சில புள்ளிவிவரங்களை அடுக்கியுள்ளனர் சீனியர்கள். அதை சேலம், தர்மபுரி மாவட்ட உதாரணங்கள், உள் அரசியலோடு அறிவாலய கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்தவகையில் சேலம் மண்டல பொறுப்பாளர் என்றவகையில் எ.வ வேலு-வுக்கு காத்திருக்கும் யுத்தம். எடப்பாடியை வீழ்த்துவாரா எ.வ வேலு? எதிர்ப்பார்ப்பில் மு.க ஸ்டாலின்.

Azhapula: "வீர சகாவே... வீர சகாவே" - வி.எஸ்., இறுதிச்சடங்கில் முழக்கமிட்ட 1-ம் வகுப்பு மாணவி!

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன் கடந்த திங்கட்கிழமை காலமானார். சிபிஎம்-ன் நிறுவனத் தலைவரான வி.எஸ்., உடல் புதன்கிழமை ஆலப்புழாவில் உள்ள வலியாச்சுடுகாட்டில் உ... மேலும் பார்க்க

FTA: மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா - இங்கிலாந்து! யாருக்கு என்ன லாபம்?

இந்தியா, இங்கிலாந்துக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மூன்று ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் க... மேலும் பார்க்க

`ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் அதிமுகவிற்கு நல்லதே நடக்கும்' - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

"எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது, வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதைப்போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச... மேலும் பார்க்க

'உங்களை சந்தித்தால் பாக்கியம் கிடைக்கும்!-அனுப்புநர் ஓ.பி.எஸ்; பெறுநர் மோடி; சந்திக்க வேண்டி கடிதம்!

பிரதமர் மோடி வருகிற ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் சில இரயில்வே திட்டங்களையும் மோடி தொடங்கி வைக்கவிருக்கிறார்... மேலும் பார்க்க

Bihar SIR: "முட்டாள்தனமான அறிக்கை..." - தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடும் ராகுல் காந்தி

பீகாரில் `ஸ்பெஷல் இன்டன்சிவ் ரிவிஷன்’ (SIR) என்ற சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.இதில், 1987-க்குப் பின்னர் பிறந்தவர்கள் தேர்தல் அலுவலர்களிடம், பி... மேலும் பார்க்க