செய்திகள் :

Tanishq: மாபெரும் தங்கப் பரிமாற்ற திட்டம்; 2 காரட் வரை கூடுதல் மதிப்பு

post image

தங்கத்தின் விலை உயர்ந்து வருவதை அடுத்து, டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டாக முன்னணி வகிக்கும் தனிஷ்க், முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கப் பரிமாற்றச் சலுகையை [Gold Exchange offer] அறிவித்துள்ளது. இச்சலுகையானது வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்கத்தை பரிமாற்றம் செய்யும் போது 2 காரட் வரை கூடுதல் மதிப்பு* [up to 2 Karat extra value*] பெறும் வாய்ப்பை வழங்குகிறது.

Tanishq
Tanishq

ஜூன் 30, 2025 வரை மட்டுமே வழங்கப்படும் இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை, வாடிக்கையாளர்கள் பின்வரும் சலுகைகளைப் பெறும் வாய்ப்பளிக்கிறது:

தங்க நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 1 காரட் கூடுதலாகப் பெறுங்கள். [1KT extra on old gold]

வைர நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 2 காரட் கூடுதலாகப் பெறுங்கள். [2KT extra on old gold]

உதாரணத்திற்கு, நீங்கள் தங்கத்தினால் மட்டும் வடிவமைக்கப்பட்ட புதிய நகைகளை வாங்கும் போது 20KT = 21KT ஆகவும், வைர  பதிக்கப்பட்ட புதிய நகைகளை வாங்கும் போது 20KT = 22KT ஆகவும் கூடுதல் மதிப்புடன் வாங்க முடியும். நீங்கள் பரிமாற்றம் செய்யும் பழைய தங்கத்தின் ஒவ்வொரு காரட்டிற்கும் அதிக மதிப்பை இச்சலுகை வழங்குகிறது. இந்த சலுகை தனிஷ்க் அல்லாத நகைக்கடைக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்ட பழைய தங்கத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாடிக்கையாளர்கள் நவநாகரீகமான, மிக நுணுக்கமான, முறையில் வடிவமைக்கப்பட்ட தனிஷ்க் நகைகளுக்கு தரம் மேம்படுத்தும் போது, அவர்களது நகைகளுக்கு கூடுதல் மதிப்பை பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tanishq
Tanishq

தனிஷ்கின் தங்கப் பரிமாற்றக் கொள்கை [Tanishq’s Gold Exchange Policy], ஏற்கனவே தங்களது பழைய நகைகளை தங்களுடைய பாணி மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆபரணங்களாக பரிமாற்றம் செய்த 3 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பகமான தீர்வாக அமைந்திருக்கிறது. இந்த பரிமாற்ற செயல்முறை முற்றிலும் வெளிப்படையானது, தங்கத் தூய்மையை மதிப்பிடுவதற்கு காரட்மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும்,  வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்கத்தைப் பரிமாற்றம் செய்யும் போது  மேலும் அதிகப் பலன்களைப் பெறுவதை உறுதிசெய்ய உத்தரவாதமான சிறந்த மதிப்பு வழங்கப்படுகிறது.

தனிஷ்க் உடன் நீங்கள் உங்களுடைய பழைய தங்கத்தை பரிமாற்றம் செய்து கொள்வது ஏன் சிறந்தது??

தங்க விலையில் அவ்வப்போது உண்டாகும் ஏற்ற இறக்கங்களாலும், வடிவமைப்பு விருப்பத்தேர்வுகள் தொடர்ந்து மாறி வருவதாலும், தனிஷ்க் தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய பழைய தங்க நகைகளுக்கு சிறந்த மதிப்பைப் பெறவும், நேர்த்தியான மற்றும் பிரமிப்பூட்டும் பல்வேறு வடிவமைப்புகளை எளிதில் வாங்கி பயனடையும் உதவுகிறது. தனிஷ்க் பிராண்டின் தங்கப் பரிமாற்றத் திட்டம் கீழ்கண்ட தேவைகள் மற்றும் எதிர்பார்புகளுக்கு பெரும் பலன்களை வழங்குகிறது:

மணப்பெண்களுக்கான பிரத்தியேக நகைத்தொகுப்புகளுக்கு, தங்களது பழைய தங்க நகைகளைப் பரிமாற்றம் செய்வதன் மூலம் மேம்படுத்த விரும்பும் திருமண வீட்டார் மற்றும் திருமண நகைகளை வாங்குபவர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கிறது.

தங்களிடம் ஏற்கனவே இருக்கும் பழைய தங்கத்திற்கு, அதிக மதிப்பை பெறும் வகையில் ஸ்மார்ட்டாக புதிய நகைகளை வாங்குபவர்கள்.


தனிஷ்கின் தனித்துவமான, நுணுக்கமான கைவினைத்திறனை வெளிப்படுத்தும் வடிவமைப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். 

சமீபத்திய நவீன போக்குகளை வெளிப்படுத்தும் வகையில் தங்களது நகைத்தொகுப்பைப் புதுப்பிக்க விரும்பும் ஃபேஷனில் முன்னோடித்துவமிக்க பெண்கள்.

இந்தச் சலுகையின் போது, ​​தூய்மை, நம்பிக்கை மற்றும் ஸ்டைலின் உத்தரவாதத்துடன் கூடிய தங்கத்தினால் மட்டும் வடிவமைக்கப்பட்ட நகைகள்,  கிளாஸ் குந்தன், குண்டன் போல்கி, ஓபன் போல்கி, வண்ணக்கற்கள், இயற்கை வைரங்கள் [Gold Plain, Glass Kundan, Kundan Polki, Open Polki, Colour Stone, Natural diamonds] மற்றும் பல நகைத்தொகுப்புகளை உள்ளடக்கிய ஏராளமான வடிவமைப்புகளிலிருந்து  வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றை வாங்கலாம்.

Tanishq
Tanishq

தனிஷ்கில் பழைய தங்கத்தை பரிமாற்றம் செய்வதால் ஏன் பெரும் பலன்கள் கிடைக்கின்றன.  முக்கிய காரணங்கள் 5:

வாடிக்கையாளர்கள் தங்களது தங்கத்திற்கு அதிகபட்ச பலனைப் பெறுவதை உறுதிசெய்ய தனிஷ்க் மிகச்சிறந்த மதிப்பை வழங்குகிறது.

இந்தியாவில் உள்ள எந்த நகைக்கடைகளிலிருந்து வாங்கிய தங்க நகைகளாக இருந்தாலும் அவற்றை தனிஷ்க் ஏற்றுக்கொள்கிறது.

தங்க பரிமாற்றம் ஆண்டு முழுவதும் வழங்கப்படுகிறது, இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது செளகரியத்திற்கேற்ப வாங்கும் வசதியையும், வாய்ப்பையும்ம வழங்குகிறது.

மிகவும் நேர்த்தியான மற்றும் நுட்பமான கைவினைத்திறனை வெளிப்படுத்தும் நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்ட நகைகளுக்கு தரம் மேம்படுத்தி கொள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு தனிஷ்க் வாய்ப்பளிக்கிறது.

தனிஷ்கின் நம்பகமான பிராண்ட் மரபு மற்றும் வெளிப்படையான பரிமாற்ற செயல்முறை, வாடிக்கையாளர்களுக்கு எந்தவித தொந்தரவில்லாத, நம்பிக்கையை வலுப்படுத்தும் அனுபவத்தை உறுதி செய்கிறது.

தங்க பரிமாற்றச் சலுகையானது, அனைத்து தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் வழங்கப்படுகிறது. தனிஷ்க் தங்க பரிமாற்ற திட்டம், திருமண சீசன், முக்கிய மைல்கற்கள், பிறந்தநாள், ஆண்டுவிழாக்கள் மற்றும் பிற பண்டிகை நிகழ்வுகள் போன்ற கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதைத் திட்டமிடும் ஒரு முக்கிய நேரத்தில் வருகிறது. தங்களது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக அணிந்து வருகின்ற ஆபரணங்களை, இன்றைய பாணிக்கு ஏற்ற வகையில் தனிப்பயனாக்கப்பட்ட திருமண நகைகளாக மாற்ற விரும்பும் மணமகளாக இருந்தாலும், சிறந்த மதிப்பைத் தேடும் புத்திசாலித்தனமான முதலீட்டாளராக இருந்தாலும், சமகால வடிவமைப்புகளுக்கு மேம்படுத்தும் போக்கு உணர்வுள்ள நகைப்ரியராக இருந்தாலும், அல்லது காலத்தால் அழியாத நேர்த்தியைத் தேடும் கைவினைத்திறனை அறிந்தவராக இருந்தாலும், இந்த தங்க பரிமாற்ற திட்டம் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்கிறது.

Tanishq
Tanishq

மிகவும் மென்மையான அல்லது பழைய தங்கத் நகைகளைக் கூட சமகால பாணியில், அன்றாடம் அணிவதற்கான நேர்த்தியுடன் மீண்டும் உருவாக்க முடியும். இது எந்தத் சிறு நகையாக இருந்தாலும் அதற்கான மதிப்பு என்பது உண்டு  என்பதை நிரூபிக்கிறது. தனிஷ்கின் தங்கப் பரிமாற்றத் திட்டம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக உதவுகிறது. இதனால் எல்லைகளைக் கடந்து, கண்கவர் வடிவமைப்புகள், நுணுக்கமான விவரணங்கள் மற்றும் காலத்தால் அழியாத நேர்த்தியுடன் கூடிய உலகத்தை கொண்டாட அனைத்து தரப்பு பெண்களையும் தனிஷ்க் வரவேற்கிறது.

தனிஷ்க் குறித்து:

டாடா குழுமத்திலிருந்து, இந்தியாவில் மிக அதிகம் நேசிக்கப்படும் நகை பிராண்ட் ஆக தனிஷ்க் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இது பெரும் பாரம்பரியமிக்க டாடா குழுமத்தின் ஒரு அங்கமாகும். மிக நுணுக்கமான கைவினைத்திறன், பிரத்தியேகமான வடிவமைப்பு, உயரிய மற்றும் உத்தரவாதமிக்க தரம் ஆகியவற்றுடன் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களிடையே நற்பெயர் பெற்றுத் திகழ்கிறது தனிஷ்க். இந்தியப் பெண்களின் நகைத் தேவைகளை மற்றும் எதிர்பார்புகளைக் கருத்தில் கொண்டு நகைத்தொகுப்புகளை வழங்குகிறது. மேலும் இந்தியப் பெண்களின் ரசனை, விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் பாரம்பரியமிக்க மற்றும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்றவாறு நகைகளை வடிவமைத்து விற்பன செய்யும் தனிச்சிறப்பு மிக்க  ஒரே  நகை நிறுவனம்  தனிஷ்க்  ஆகும். மிகத் தூய்மையான நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக தனிஷ்க் விற்பனையகங்களில் அதிநவீன காரட் மீட்டர்கள் உள்ளன. அவற்றில் வாடிக்கையாளர்கள் திறம்பட நகைகளின் தூய்மைத் தன்மை குறித்து பரிசோதித்து அறிந்து கொள்ளலாம். தற்போத 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் 500-க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்கள் தனிஷ்கிற்கு உள்ளன.

இ-காமர்ஸ் பிசினஸ் தொடங்க ஒரு லேப்டாப், வைஃபை வசதி போதும்! - வழிகாட்டும் நிகழ்ச்சி

எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் வீட்டிலிருந்தே அமேசான் விற்பனை தளத்தில் பிசினஸ் தொடங்குவது பற்றிய நிகழ்ச்சி சென்னையில் ஜூன் 22 ஆம் தேதி(ஞாயிறு) நடைபெற உள்ளது. இ-காமர்ஸ் எக்ஸ்பெர்டும் நியூஜென்மேக்ஸ் நி... மேலும் பார்க்க

Bengaluru: 10 லட்சம் ஐடி ஊழியர்கள்; உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் இடம் பெற்ற பெங்களூரு!

உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக பெங்களூரு வளர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான CBRE ஆல் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில்நுட்ப திறமை வழிகாட்டி புத்தகம் கூறுவதன்படி,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "குஜராத் உப்பு இறக்குமதிக்குத் தடை" - உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை; பின்னணி என்ன?

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு, இயற்கையாகவே அதிக வெண்மை நிறம் உடையது என்பதால் தூத்துக்குடி உ... மேலும் பார்க்க

Tamilnadu: "நாளை இந்தியா என்ன வாங்கும் என்பதை தெரிந்துகொள்ள கோவை, சென்னை செல்லுங்கள்" - கோத்ரேஜ் CEO

பெரிய பெரிய நிறுவனங்கள், வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களை (FMCG) ஏன் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துகின்றன என்ற கேள்விக்கு கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராட்கட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர் சீதாபதி தனது லி... மேலும் பார்க்க

GRT: வள்ளியூரில் வளம் சேர்க்க வந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்; பிரகாசமான 64வது புதிய ஷோரூம்

ஒவ்வொரு நகையும் ஒரு நினைவை சுமந்து கொண்டிருக்கும் என்னும் கருத்திற்கேற்ப, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இத்தகைய கோடிக்கணக்கான நினைவுகளின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. 1964-ஆம் ... மேலும் பார்க்க

நூற்றாண்டு கடந்த சிவகாசி பட்டாசு: புவிசார் குறியீடு வழங்கிட பட்டாசு உற்பத்தியாளர்கள் விண்ணப்பம்

’பட்டாசு’ என்றாலே நினைவுக்கு வருவது சிவகாசிதான். 1920-களில் சிவகாசி பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக மாற்றுத் தொழிலை உருவாக்கிட சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் இருவரும் மேற்கு வங்க மாநிலத... மேலும் பார்க்க