செய்திகள் :

UPSC/TNPSC தேர்வுக்கு ஒரே நேரத்தில் தயாராவது எப்படி? -பயிற்சி முகாமில் விளக்கும் வெ.திருப்புகழ் IAS

post image

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

'UPSC/TNPSC குரூப் -1, 2 - தேர்வுகளில் வெல்வது எப்படி?' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

இந்த நிகழ்வில் முனைவர் வெ.திருப்புகழ் IAS (Retd.) தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய முன்னாள் ஆலோசகர், டாக்டர் K.விஜயகார்த்திகேயன் IAS, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள். இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதனும் ஊக்க உரை ஆற்றுகிறார்.

ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளும் முனைவர் வெ.திருப்புகழ் IAS (Retd.) அவர்களிடம் தொடர்புகொண்டு பேசினோம். " UPSC/ TNPSC தேர்வுக்கு நிறைய பேர் தயாராகுகிறார்கள். ஆனால் அதில் சிலருக்கு சரியான கைடன்ஸ் கிடைப்பதில்லை.

சிலர் தன்னபிக்கை இல்லாமலும் இருப்பார்கள். இதுபோன்ற மாணவர்கள் எப்படி தயாராக வேண்டும். அதில் இருக்கக்கூடிய சிரமங்கள் என்னென்ன? அதில் தேர்ச்சி பெற்றால் என்ன சாதிக்கலாம்? என்ன மாதிரியான நன்மைகள் இந்த சமுதாயத்திற்கு கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வில் பேச இருக்கிறேன்.

கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் UPSC தேர்வு எழுதுகிறார்கள். அதில் 100 பேருக்கு தான் IAS ஆக பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும், விண்ணப்பிக்க வேண்டும், அதேபோல நேர்முகத்தேர்வு மற்றும் UPSC/ TNPSC தேர்வுக்கு ஒரே நேரத்தில் தயாராவது எப்படி? போன்ற விஷயங்களத் தெரிந்துகொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்று அதிக அளவில் பணியில் அமரவேண்டும்" என்று கூறினார்.

முன்பதிவு செய்ய

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

தேசிய நல்லாசிரியர் விருது 2025; தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு!

தேசிய 'நல்லாசிரியர் விருது' தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தினம்... மேலும் பார்க்க

AI for Student: மாணவர்களே சூப்பர் மார்க் எடுக்கணுமா? ஏஐ-ஐ இப்படிப் பயன்படுத்துங்க!

உலகின் அனைத்து துறைகளிலும், 'ஏ.ஐ' என்ட்ரி கொடுத்துவிட்டது. பணிபுரிபவர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள் தான் ஏ.ஐயைப் பயன்படுத்த முடியும் என்பதில்லை. ஹோம்மேக்கர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட ஏ.ஐ-ஐ... மேலும் பார்க்க

விகடன் செய்தி: ஏழை மருத்துவ மாணவிக்கு ஸ்மார்ட் போன், லேப்டாப், ரூ.1 லட்சம் வழங்கிய அருண் நேரு எம்.பி

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாரி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பிளஸ் டூ வரை படித்து 600க்கு 573 மதிப்பெண் எடுத்தார். இதோடு நீட் தேர்வி... மேலும் பார்க்க

UPSC/TNPSC: 'புக் லெட், கையேடு, ஸ்காலர்ஷிப் கொடுக்கிறோம்' - King Makers இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன்

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. UP... மேலும் பார்க்க

UPSC / TNPSC: சென்னையில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.'UP... மேலும் பார்க்க

ஸ்டாலின் வெளியிட்ட மாநில கல்விக் கொள்கை: பாராட்டுகளும் கவலைத் தரும் அம்சமும்! - விளக்கும் கல்வியாளர்

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்... மேலும் பார்க்க