செய்திகள் :

US Doomsday Planes: அணு ஆயுத போரில் அதிபரை பாதுகாக்கும் விமானம்... இதன் தனித்துவம் என்ன?

post image

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடைபெற்றுவரும் சூழலில், அமெரிக்கா ராணுவ ரீதியில் நேரடியாக ஈரானைத் தாக்க திட்டமிட்டு வருகிறது.

இந்த சூழலில் கவனம் பெறுகிறது வாஷிங்டனுக்கு கொண்டுவரப்பட்ட டூம்ஸ்டே பிளேன்.  E-4B Nightwatch என அழைக்கப்படும் அந்த விமானம் பாதுகாப்புச் செயலாளரையும் பிற பாதுகாப்பு அதிகாரிகளையும் பாதுகாக்கும் என நியுயார்க் டைம்ஸ் தளம் கூறுகிறது.

US Doomsday Planes
US Doomsday Planes

அணு ஆயுத போர் நடைபெற்றாலும், அரசு தொடர்ந்து இயங்குவதற்கு இந்த விமானம் இன்றியமையாததாக இருக்கும். எனவே இந்த விமானத்தை லூசியானா மகாணத்தில் இருந்து மேரிலாந்துக்கு எடுத்துவந்துள்ளனர்.

அது என்ன Doomsday planes?

டூம்ஸ் டே விமானம் அல்லது அழிவுக்கால விமானம் அமெரிக்காவின் விமானப்படையால் இயக்கப்படுகிறது.

ஒரு போயிங் 747 விமானம், தேசிய வான்வழி செயல்பாட்டு மையமாக (NAOC) இயங்கும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்டால் அதுதான் Doomsday planes!

நெருக்கடி காலத்தில் இந்த விமானத்தில் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் கூட்டுப் படைகளின் தளபதிகள் ஆகிய உயர் பதவியில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். இதிலிருந்து நாடுமுழுவதும் தொடர்புகளைப் பராமரிக்கவும் உத்தரவுகளை வழங்கவும் முடியும்.

இந்த விமானத்தில் 112 உறுப்பினர்கள் செல்ல முடியும். 11,260 கிலோமீட்டர்களுக்கு மேல் தொடர்ந்து பயணிக்கக் கூடியது.

இந்த விமானங்கள் சைபர் தாக்குதல்கள், அணு ஆயுத தாக்குதல்கள், மின்காந்த விளைவுகளை எதிர்கொண்டாலும் ஆபத்துகளிலிருந்து தப்பி உறுதியாக இருக்கும் என்கின்றனர். நேரடி தாக்குதல்கள் நடத்தப்படும் பட்சத்தில் பதில் தாக்குதல் நடத்தும் திறனும் இவற்றிடம் உள்ளது.

இந்த விமானம் வெப்பம் மற்றும் அணுக்கருவில் இருந்து பாதுகாக்கும் கவசத்தைக் கொண்டிருக்கிறது. இதன் மூக்கு பகுதியிலிருக்கும் ரே டோமில் உள்ள 67 செயற்கைகோள் டிஷ்கள் மற்றும் ஆன்டனாக்கள் மூலம் உலகின் எந்த பகுதியையும் தொடர்புகொள்ள முடியும்.

ஒருவாரம் வரை இந்த விமானம் தரையிறங்காமல் வானிலேயே இயங்க முடியும். பறந்துகொண்டிருக்கும்போதே இதன் எரிபொருளையும் நிரப்பிக்கொள்ள முடியும் என்கின்றனர். அமெரிக்காவில் இப்போது 4 டூம்ஸ் டே விமானங்கள் உள்ளன. தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடும் இந்த விமானங்களில் ஒன்று போர் சூழலில் வாஷிங்டன் வந்திருப்பதுதான் பேசுபொருளாகியிருக்கிறது.

Emobot: செல்ஃபி மூலம் மன அழுத்தத்தைக் கண்டறியலாம்? எப்படி தெரியுமா?

கேமராவின் முன் பக்கம் மூலம் மன ஆரோக்கியத்தை பகுப்பாய்வு செய்ய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாகி வருகிறது. நூற்றுக்கணக்கான நோயாளிகளின் மனநிலையைக் கண்காணிக்கவும், அவர்களின் மனச்சோர்வு சிகிச்சையின் செயல்தி... மேலும் பார்க்க

SpaceX: பரிசோதனையில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்; ஸ்பேஸ் எக்ஸ் விளக்கம் | Viral Video

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசா மற்றும் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பல முக்கியப் பணிகளைச் செய்துவருகின்றது. குறிப்பாக, ஸ்பேஸ் எக்ஸ் உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் விமானத்தை உருவாக்குவதில் தீவ... மேலும் பார்க்க

கேரளாவில் அவசரமாக தரையிறங்கிய உலகின் காஸ்ட்லியான ஃபைட்டர் ஜெட் - வானில் செய்யும் சாகசங்கள் என்னென்ன?

பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35 ஸ்டெல்த் போர் விமானம் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து 48 மணி நேரங்களுக்கும் மேலாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நிற்கிறது.F-35 விமானம்,... மேலும் பார்க்க

``மனித மூளையை மிஞ்சும் நுண்ணறிவு AI'' - சூப்பர் இன்டெலிஜென்ஸ் குழுவை அமைத்த மார்க் ஜுக்கர்பெர்க்!

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் புதிய ”சூப்பர் இன்டெலிஜென்ஸ்” குழுவை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தி நியூயார்க் டைம்ஸ் கூற்றுப்படி, மார்க் ஜுக்கர்பெர்க் தனி... மேலும் பார்க்க

இந்தியாவில் Starlink இணைய சேவை; 1 மாதம் இலவசம்.. தலைசுற்றும் விலை; எலான் மஸ்க் திட்டம் என்ன?

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், கடந்த வாரம் குளோபல் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன் பை சேட்டிலைட் (GMPCS) உரிமத்தை தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) பெற்றுள்ளது. இதன் மூலம் உலகின் பல நாடுகளில்... மேலும் பார்க்க

நீல் மோகன்: இந்திய - அமெரிக்கரை தக்கவைக்க 100 மில்லியன் டாலர் வழங்கிய கூகுள்! - ஏன் தெரியுமா?

10 ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் நிறுவனம் ஓர் இந்திய - அமெரிக்க தொழிலதிபர், ட்விட்டர் நிறுவனத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக 100 மில்லியன் டாலர்கள் வழங்கியது என்றால் நம்ப முடிகிறதா?செரொதா நிறுவனத... மேலும் பார்க்க