சந்தா அடிப்படையில் பேட்டரி: அறிமுகப்படுத்துகிறது ஹீரோ மோட்டோகாா்ப்
US Doomsday Planes: அணு ஆயுத போரில் அதிபரை பாதுகாக்கும் விமானம்... இதன் தனித்துவம் என்ன?
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடைபெற்றுவரும் சூழலில், அமெரிக்கா ராணுவ ரீதியில் நேரடியாக ஈரானைத் தாக்க திட்டமிட்டு வருகிறது.
இந்த சூழலில் கவனம் பெறுகிறது வாஷிங்டனுக்கு கொண்டுவரப்பட்ட டூம்ஸ்டே பிளேன். E-4B Nightwatch என அழைக்கப்படும் அந்த விமானம் பாதுகாப்புச் செயலாளரையும் பிற பாதுகாப்பு அதிகாரிகளையும் பாதுகாக்கும் என நியுயார்க் டைம்ஸ் தளம் கூறுகிறது.
அணு ஆயுத போர் நடைபெற்றாலும், அரசு தொடர்ந்து இயங்குவதற்கு இந்த விமானம் இன்றியமையாததாக இருக்கும். எனவே இந்த விமானத்தை லூசியானா மகாணத்தில் இருந்து மேரிலாந்துக்கு எடுத்துவந்துள்ளனர்.
அது என்ன Doomsday planes?
டூம்ஸ் டே விமானம் அல்லது அழிவுக்கால விமானம் அமெரிக்காவின் விமானப்படையால் இயக்கப்படுகிறது.
ஒரு போயிங் 747 விமானம், தேசிய வான்வழி செயல்பாட்டு மையமாக (NAOC) இயங்கும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்டால் அதுதான் Doomsday planes!
நெருக்கடி காலத்தில் இந்த விமானத்தில் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் கூட்டுப் படைகளின் தளபதிகள் ஆகிய உயர் பதவியில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். இதிலிருந்து நாடுமுழுவதும் தொடர்புகளைப் பராமரிக்கவும் உத்தரவுகளை வழங்கவும் முடியும்.
An E-4B assigned to Eighth Air Force from @Offutt_AFB conducts flight tests with the KC-46 Pegasus at @EdwardsAFB. The E-4B is the latest @usairforce aircraft to undergo flight testing with the KC-46. #AVgeek#readyAFpic.twitter.com/2O6fjiDyhw
— U.S. Air Force Materiel Command ✈️ (@HQ_AFMC) March 15, 2021
இந்த விமானத்தில் 112 உறுப்பினர்கள் செல்ல முடியும். 11,260 கிலோமீட்டர்களுக்கு மேல் தொடர்ந்து பயணிக்கக் கூடியது.
இந்த விமானங்கள் சைபர் தாக்குதல்கள், அணு ஆயுத தாக்குதல்கள், மின்காந்த விளைவுகளை எதிர்கொண்டாலும் ஆபத்துகளிலிருந்து தப்பி உறுதியாக இருக்கும் என்கின்றனர். நேரடி தாக்குதல்கள் நடத்தப்படும் பட்சத்தில் பதில் தாக்குதல் நடத்தும் திறனும் இவற்றிடம் உள்ளது.
இந்த விமானம் வெப்பம் மற்றும் அணுக்கருவில் இருந்து பாதுகாக்கும் கவசத்தைக் கொண்டிருக்கிறது. இதன் மூக்கு பகுதியிலிருக்கும் ரே டோமில் உள்ள 67 செயற்கைகோள் டிஷ்கள் மற்றும் ஆன்டனாக்கள் மூலம் உலகின் எந்த பகுதியையும் தொடர்புகொள்ள முடியும்.
ஒருவாரம் வரை இந்த விமானம் தரையிறங்காமல் வானிலேயே இயங்க முடியும். பறந்துகொண்டிருக்கும்போதே இதன் எரிபொருளையும் நிரப்பிக்கொள்ள முடியும் என்கின்றனர். அமெரிக்காவில் இப்போது 4 டூம்ஸ் டே விமானங்கள் உள்ளன. தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடும் இந்த விமானங்களில் ஒன்று போர் சூழலில் வாஷிங்டன் வந்திருப்பதுதான் பேசுபொருளாகியிருக்கிறது.