செய்திகள் :

அச்சுதானந்தன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்!

post image

கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23-ஆம் தேதி மூச்சுத் திணறலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

இதுதொடர்பாக புதன்கிழமை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மூத்த தலைவர் அச்சுதானந்தன் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. செவ்வாய்க்கிழமை, அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட சிறப்புக் குழு மருத்துவமனைக்குச் சென்று அவரது சிகிச்சையை மதிப்பாய்வு செய்தது.

101 வயதான தலைவர் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு, நிபுணர்கள் குழுவின் பராமரிப்பில் உள்ளார். அவரது முக்கிய உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

வயது முதிர்வால் அச்சுதானந்தனின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று மருத்துவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. எனினும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், அவரது சிறூநீரக செயல்பாடு மோசமாகியுள்ளதாகவும், ரத்த அழுத்தமும் சீராக இல்லையென்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Former Kerala Chief Minister V S Achuthanandan remains in critical condition at a private hospital after suffering a cardiac attack.

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்... மேலும் பார்க்க

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, இத்தகைய தேவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். 1955-... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்டது முதல் குழு

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஜம்மு முகாமில் இருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு 5,892 பேருடன் முதலா... மேலும் பார்க்க