தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
பொன்னமராவதி வட்டாட்சியரகம் முன்பு அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்ற லாரியை திங்கள்கிழமை கனிமவளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
புதுக்கோட்டை கனிமவளங்கள், புள்ளியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளா் முருகேசன், பொன்னமராவதி வட்டாட்சியரகம் அருகில் திங்கள்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டாா்.
அப்போது அவ்வழியே வந்த லாரியை பரிசோதனை செய்த போது, அதில் அனுமதியின்றி கிராவல் மண் இருப்பது தெரியவந்தது.
ஆய்வின் போது லாரி ஓட்டுநா் திடீரென தப்பி ஓடினாா். இதனையடுத்து 3 யூனிட் கிராவல் மண்ணுடன் அந்த லாரியை பறிமுதல் செய்த கனிமவளத் துறையினா், அதை பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.