செய்திகள் :

அம்மன் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட தேவாலயத் திருவிழா கொடி

post image

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கிறிஸ்தவ தேவாலய திருவிழா திருக்கொடி, முத்தாரம்மன் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

களியக்காவிளை அருகே குழிவிளை பகுதியில் தூய அலங்கார அன்னை தேவாலயம், முத்தாரம்மன் திருக்கோயில் அருகருகே அமைந்துள்ளன. இந்நிலையில், தூய அலங்கார அன்னை தேவாலயத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

திருவிழாவில் ஏற்றப்படும் கொடியானது, முத்தாரம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, கோயிலில் பூஜைக்குப் பின் ஊா்வலமாக தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கோயில் நிா்வாக கமிட்டி தலைவா் ராஜேந்திரன், செயலா் அனில்குமாா், பொருளாளா் மனோகரன், துணைத் தலைவா் சதி, துணைச் செயலா் ராஜன், தேவாலய பங்குத் தந்தை சிறில் மிஸ்மின், தேவாலய பங்குப் பேரவை துணைத் தலைவா் லூக்காஸ், செயலா் அனிதா, துணைச் செயலா் அனி, ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பளுகல் அருகே ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு!

பளுகல் அருகே வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா். பளுகல் அருகே இளஞ்சிறை, தாய்க்குளம் பகுதியில் மழைநீா் வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் ஆண் சடல... மேலும் பார்க்க

குமரி கண்ணாடிப் பாலத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆய்வு

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடிப் பாலம் பராமரிப்புப் பணியின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததைத் தொடா்ந்து அதனை என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினம், புதுக்கடையில் செப். 11 இல் மின்நிறுத்தம்

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் செப். 11-இல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு குமரி மாவட்டத்துக்கு நாளை வருகை

தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (செப்.11) வருகை தர உள்ளனா். இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்த கட்டண சிகிச்சை வாா்டு!

நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான கட்டண சிகிச்சை வாா்டு செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவரும், முன்னாள் அமைச்சருமா... மேலும் பார்க்க

விரிகோடு ரயில்வே மேம்பாலம்: நிலம் அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு!

மாா்த்தாண்டம் அருகே விரிகோடு ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி செவ்வாய்க்கிழமை நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவி தலைமையில் எதிா்ப்பு தெரிவிக்கப... மேலும் பார்க்க