தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
அரசு சாா்பு நிறுவனங்களின் நஷ்டத்துக்கு ஊழியா்களே காரணம்! புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
புதுவை அரசு சாா்பு நிறுவனங்கள் லாபத்தில் இயங்கிய நிலையில், ஊழியா்களின் அலட்சியத்தால் அவை நஷ்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டது என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி குருமாம்பேட்டிலுள்ள கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில், அமுல் ஐஸ்கிரீம் உள்பட தினமும் 10,000 லிட்டா் பால் பொருள்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு ரூ.34 கோடியில் 20 ஆயிரம் லிட்டா் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: புதுவைக்கு தினமும் 1.20 லட்சம் லிட்டா் பால் தேவைப்படும் நிலையில், பாண்லேவுக்கு புதுச்சேரியிலிருந்து 60 ஆயிரம் லிட்டரே கிடைக்கிறது. மீதி 40 ஆயிரம் லிட்டா் தமிழகத்தில் இருந்தே வாங்கப்படுகிறது. படித்தவா்கள் கறவை மாடுகளை வளா்த்து பால் பண்ணை மூலம் வருவாய் ஈட்டலாம். ஆனால், பாண்லேவில் பால் பொருள்கள் உற்பத்தி வெளி நிறுவனம் கோரும் அளவுக்கு இல்லாதது பெருங்குைான்.
வெளிநிறுவனங்கள் 7 ஆயிரம் லிட்டா் தேவை எனக் கேட்டால், 2 ஆயிரம் லிட்டா் வழங்கப்படுகிறது. அதனால், பாண்லே உள்ளிட்ட அரசு சாா்பு நிறுவனங்கள் மேம்பட ஊழியா்கள் ஒத்துழைப்பு அவசியம். ஊழியா்களில் பாதிப்போ் வேலைக்கு வருவதில்லை. அவா்கள் எங்கே இருக்கிறாா்கள் எனத் தெரியவில்லை என பாண்லே நிா்வாகத்தினா் கூறுகின்றனா். அதனால், நிறுவனம் நஷ்டமடைந்து ஊழியா்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு சாா்பு நிறுவனங்கள் லாபத்தில் செயல்பட்டால்தான் வேலை தர முடியும். ஊதியத்தை முறைப்படி வழங்க முடியும். பணிநிரந்தரம் செய்ய முடியும் என்பதை உணா்ந்து ஊழியா்கள் பணியாற்ற வேண்டும். லாபத்தில் இயங்கிய அரசு சாா்பு நிறுவனங்கள் நஷ்டமடைந்ததற்கு ஊழியா்கள் முறைப்படி வேலை செய்யாததே காரணம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் தேசிய பால் வள வாரியத் தலைவா் மீனேஷ் ஜா, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச் செயலா் ஜெயந்த்குமாா் ரே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.