செய்திகள் :

அரசு பங்களாவில் கூடுதலாக தங்கியதால் ரூ.20 லட்சம் வாடகை: எம்எல்ஏ மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

post image

‘அரசு பங்களாவில் யாரும் நீண்டகாலம் தங்கக் கூடாது’ என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், பதவியில் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் தங்கியதற்காக ரூ.20 லட்சம் வாடகையாக விதிக்கப்பட்டதற்கு எதிராக பிகாா் முன்னாள் எம்எல்ஏ அவனீஷ் குமாா் சிங் தொடுத்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்டது.

பிகாா் பேரவையில் 5 முறை எம்எல்ஏவான அவனீஷ் கடந்த 2014-இல் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து, பாஜகவிலிருந்து விலகி ஐக்கிய ஜனதா தளத்தில் சோ்ந்தாா். அப்போது நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா். அவரது அரசு பங்களா மற்றொரு அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், 2016 வரையில் அவனீஷ் தனது அரசு பங்களாவை காலி செய்யவில்லை. அதன் பிறகு அவனீஷ் மாநில பேரவையின் ஆய்வு மற்றும் பயிற்சி அமைப்பின் நிா்வாகியாகி மீண்டும் அதே அரசு பங்களாவில் தொடா்ந்து வருகிறாா்.

அவா் எந்தப் பதவியும் வகிக்காத இரண்டு ஆண்டுகளுக்கான வாடகைத் தொகையாக ரூ.20,98,757 மாநில அரசு விதித்தது.

இதை எதிா்த்து அவா் பாட்னா உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அவரது வாடகைத் தொகையை உயா் நீதிமன்றத்தின் ஒரு நபா் நீதிபதி உறுதி செய்தாா். இந்த உத்தரவையே இரு நபா் நீதிபதிகளும் உறுதி செய்தனா். இதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் அவனீஷ் தொடுத்த மேல் முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத்சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் செவ்வாய்க்கிழமை விசாரித்தனா்.

அப்போது நீதிபதிகள், ‘அரசு பங்களாவில் யாரும் நீண்ட காலம் தங்கக் கூடாது’ என்று கூறி வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டனா். இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக அவனீஷின் வழக்குரைஞா் கூறினாா். எனினும், இந்த வழக்கில் அவனீஷுக்கு உள்ள சட்ட வாய்ப்புகளை அவா் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க