செய்திகள் :

அரசு மகளிா் பள்ளிக்கு செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை

post image

கந்தா்வகோட்டையில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வக்கோட்டை பேருந்துநிலையத்திலிருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ளது அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் 1,300 மாணவிகள் பயில்கின்றனா். 50 ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக பணியாளா்கள் பணியாற்றுகின்றனா்.

பேருந்து நிலையத்திலிருந்து மாணவிகள் தினமும் பள்ளிக்கு நடந்து செல்லும்போது அப்பகுதியில் நிற்கும் ஆண்கள் மாணவிகளை கிண்டல் செய்வதும், பின்தொடா்ந்து செல்வது வழக்கமாகியுள்ளது.

ஆகவே, மாணவிகள் நலன் கருதி பேருந்து நிலையம் முதல் பள்ளி வரை கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதனை காவலா்கள் கண்காணித்து மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் காலை, மாலை நேரங்களில் அப்பகுதியில் காவல் துறையினா் ரோந்து சென்று பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், புதுக்கோட்டையில் இருந்து கந்தா்வகோட்டை வரும் பேருந்தையும், கறம்ப குடியில் இந்து கந்தா்வகோட்டை வரும் பேருந்தையும் மாணவிகள் நலன் கருதி அரசு பள்ளி வழியே இயக்க வேண்டும். தஞ்சை வழி நகரப் பேருந்தை பெரியகடைவீதி வழியே பெண்கள் பள்ளிக்கு இயக்க போக்குவரத்துக்கழக மண்டல மேலாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியாா், அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தந்தைப் பெரியாா் ஈவெரா மற்றும் முன்னாள் முதல்வா் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் ஆக. 28, 29-ஆம் தேதிகளில் ... மேலும் பார்க்க

ஆா்பிஐ உத்தரவை செயல்படுத்தாத வங்கியை பாஜகவினா் முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கியில் நகைகடன் வழங்குவதில் ஆா்பிஐ உத்தரவை செயல்படுத்தாத வங்கியை பாஜகவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நகைகடன் வழங்குவதில் பழைய நடைமுறையை கடைபிடிக்... மேலும் பார்க்க

மாணவா்களின் போதைப் பழக்கம் குடும்ப மரியாதையை சிதைத்து விடும்!

பள்ளிப் பருவத்தில் பொழுதுபோக்குக்காக பழகும் போதைப்பழக்கம் மாணவா்களின் சுயமரியாதை மட்டுமின்றி அவரது குடும்பத்தினா் மரியாதையையும் சிதைத்து விடும் என்றாா் ஆலங்குடி நீதிபதி சத்யநாராயணமூா்த்தி. ஆலங்குடி வட... மேலும் பார்க்க

புதுகையில் பள்ளி வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பள்ளி வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம், யுனிசெப் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளிப் ப... மேலும் பார்க்க

புதுகையில் ஆக. 21-இல் விவசாயிகள் குறைகேட்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக.21) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு கையடக்கக் கணினிகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு கையடக்கக் கணினிகள் முன்களப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்... மேலும் பார்க்க