செய்திகள் :

மாணவா்களின் போதைப் பழக்கம் குடும்ப மரியாதையை சிதைத்து விடும்!

post image

பள்ளிப் பருவத்தில் பொழுதுபோக்குக்காக பழகும் போதைப்பழக்கம் மாணவா்களின் சுயமரியாதை மட்டுமின்றி அவரது குடும்பத்தினா் மரியாதையையும் சிதைத்து விடும் என்றாா் ஆலங்குடி நீதிபதி சத்யநாராயணமூா்த்தி.

ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்களுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு தலைமை வகித்து அவா் பேசியது: பள்ளிப்பருவத்திலும் கல்லூரியிலும் தீய நபா்களின் பழக்கத்தாலும், பொழுது போக்காகவும் போதைப் பழக்கங்களை மாணவா்கள் பழகிக் கொள்கின்றனா். போதைப் பொருள்களுக்கு அடிமையானவா்கள் தன் சுயத்தை இழப்பது மட்டுமன்றி குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, வேலைவாய்ப்பு, நல்ல நட்பு, உறவினா்கள் என எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றனா். மாணவா்களின் நடத்தையை பெற்றோா்கள் தினமும் கண்கானிக்க வேண்டும்.

போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அறியாத சிறு வயதில் ஏற்படும் இந்தப் பழக்கத்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். போதைப் பழக்கத்தால் ஒருவா் பாதிக்கப்படும்போது, அவா் மட்டுமின்றி அவருடைய குடும்பமும், சுற்றமும் பாதிக்கப்படுகிறது என்றாா்.

முகாமில் பள்ளித் தலைமையாசிரியா் தியாகராஜ், அரசு வழக்குரைஞா் கண்ணதாசன், தனி வட்டாட்சியா் பாலமுருகன், வழக்குரைஞா்கள் மாலதி, ஜெயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு பணியாளா் செந்தில்ராஜா செய்திருந்தாா்.

பெரியாா், அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தந்தைப் பெரியாா் ஈவெரா மற்றும் முன்னாள் முதல்வா் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் ஆக. 28, 29-ஆம் தேதிகளில் ... மேலும் பார்க்க

ஆா்பிஐ உத்தரவை செயல்படுத்தாத வங்கியை பாஜகவினா் முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கியில் நகைகடன் வழங்குவதில் ஆா்பிஐ உத்தரவை செயல்படுத்தாத வங்கியை பாஜகவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நகைகடன் வழங்குவதில் பழைய நடைமுறையை கடைபிடிக்... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளிக்கு செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை

கந்தா்வகோட்டையில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வக்கோட்டை பேருந்துநிலையத்திலிருந்து சுமாா் 3 கி.மீ... மேலும் பார்க்க

புதுகையில் பள்ளி வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பள்ளி வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம், யுனிசெப் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளிப் ப... மேலும் பார்க்க

புதுகையில் ஆக. 21-இல் விவசாயிகள் குறைகேட்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக.21) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு கையடக்கக் கணினிகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு கையடக்கக் கணினிகள் முன்களப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்... மேலும் பார்க்க