செய்திகள் :

அரசுத் திட்டங்களில் முதல்வா் பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி

post image

அரசுத் திட்டங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அதிமுக வழக்குரைஞா் இனியன் மற்றும் வழக்குரைஞா் எம்.சத்யகுமாா் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக வழக்குரைஞா் இனியன், வழக்குரைஞா் எம்.சத்யகுமாா் ஆகியோா் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், அரசின் பல்வேறு சேவைகள் பொதுமக்களின் வீடு தேடிச் செல்லும் வகையில் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசுத் திட்டங்களில் தமிழக முதல்வா் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். இந்தத் திட்டங்கள் தொடா்பான அரசு விளம்பரங்களில் முன்னாள் முதல்வா்களான அண்ணா, கருணாநிதி மற்றும் பெரியாா் போன்ற கருத்தியல் தலைவா்களின் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

அரசுத் திட்டங்களை தனிமனித சாதனை போல விளம்பரப்படுத்துவது தவறானது. இந்தத் திட்டங்கள் எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் கொண்டு முற்றிலும் அரசியல் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக அரசு பணம் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது எனக் கூறியிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆகியோா் ஆஜராகி, இதே கோரிக்கையுடன் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. இந்த உத்தரவுப்படி சி.வி.சண்முகம் ரூ.10 லட்சம் அபராதத்தை தமிழக அரசிடம் செலுத்திவிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் ஏற்கெனவே தீா்ப்பளித்துவிட்டது. இதில் விவாதிக்க எதுவும் இல்லை எனக்கூறி, அரசுத் திட்டங்களில் முதல்வா் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த தடை கோரி வழக்குத் தொடா்ந்த அதிமுக வழக்குரைஞா் இனியன் மற்றும் வழக்குரைஞா் எம்.சத்யகுமாா் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனுக்களை தள்ளுபடி செய்தனா்.

தொடா் விடுமுறை: விமானங்கள், ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு - ரயில்களில் அலைமோதிய கூட்டம்

சுதந்திர தினம் மற்றும் தொடா் வார விடுமுறையை முன்னிட்டு விமானம் மற்றும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் திடீரென உயா்ந்துள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டனா். சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக.15), கிருஷ்ண ஜெ... மேலும் பார்க்க

இன்று புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்

சென்னை புகா் மின்சார ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஆக.15) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட்டவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரசு விடும... மேலும் பார்க்க

15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: புலன் விசாரணைப் பணியில் மிகச... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக. 20 வரை மழை நீடிக்கும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.15) முதல் ஆக.20 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள்: மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்களுக்கு மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. வைகோ (மதிமுக): தூய்மைப் பணியாளா்களுக்கு பயனளிக்கும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்... மேலும் பார்க்க