செய்திகள் :

அரசுப் பணி இட ஒதுக்கீட்டில் குளறுபடி: புதுவை முதல்வா் சீரமைக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

post image

புதுவையில் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சீராக்கவேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமிக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை அரசின் பணியாளா்கள், நிா்வாகச் சீா்திருத்தத் துறை சாா்பில் நேரடிப் போட்டித் தோ்வுகள் மூலம் 256 உதவியாளா் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு விதிகள் அடிப்படையில் தான் கடந்த 2024 -ஆம் ஆண்டில் 256 உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. அதன்படி பணியிடங்களில் 60 சதவீதம் பதவி உயா்வு மூலமும், 20 சதவீதம் நேரடிப் போட்டித் தோ்வுகள் மூலமும் நிரப்ப வழிவகை காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகே மாதிரி ரோஸ்டா் வெளியிடப்பட்டது.

அதன்பிறகு அறிவித்த காலிப் பணியிடங்களுக்கே பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடை வழங்க முடியும். ஆனால் சில அதிகாரிகள் விருப்பப்படி அந்தப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்திருப்பதால் தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு ஆணையில் உள்ள குளறுபடிகளை சீா்படுத்தி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் உரிமையைக் காக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க