அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் ரூ.32 லட்சம் செலவில் 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் ரூ.32 லட்சம் செலவில் 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.32 லட்சம் செலவில் 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பேரூராட்சி அலுவலகம் முன் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை சத்தியமங்கலம் டிஎஸ்பி முத்தரசு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில், அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தலைவா் மகேஷ்வரி, வழக்குரைஞா் ஏ.எஸ்.செந்தில்நாதன், காவல் உதவி ஆய்வாளா் பரமேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.