செய்திகள் :

அற்புதங்களை அளிக்கும் அன்னை...

post image

சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, அடிமுடி சித்தர், பாம்பன் சுவாமிகள்,போளூர் விட்டோ சுவாமிகள் உள்ளிட்ட மகான்களோடு பழகியவர் ஸ்ரீ சக்கரத்து அம்மன்.

"எங்கு செல்ல வேண்டுமென்றாலும் பறவை போல பறந்து செல்லும் ஆற்றலை பெற்றவர் சக்கரத்து அம்மையார்' என்று திரு.வி.க. தன்னுடைய நூலிலே பதிவு செய்திருக்கிறார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயமான பெரியநாயகி உடனுறை கனககிரீஸ்வரர் கோயிலில் தொண்டு செய்யும் சிவாச்சாரியார் மகளாக அனந்தாம்பாள் என்ற திருநாமத்துடன்

1854}இல் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் அவதரித்தார். இவரின் தாயார் இளம் வயதில் சிவ பதவி அடைந்துவிட, சிறிய தாயார் அன்பில் வளர்ந்தார். இவர் சிவ ஆகமங்களைப் பயின்று, தேவிகாபுரம் பெரியநாயகி சந்நிதி எதிரில் அமர்ந்து பல மணி நேரம் நிஷ்டையில் இருப்பார்.

அனந்தாம்பாளுக்கு ஒன்பது வயதாகும்போது, சென்னை கோமளீஸ்வரன்பேட்டையில் வசித்த மடாதிபதி சாம்பசிவம் என்பவருக்கு மனைவியாகினார். சில ஆண்டுகளில் கணவர் சிவபதம் அடைந்துவிட, தான் வசித்த வீட்டின் மாடியிலே பத்து ஆண்டுகள் கடும் தவம் இயற்றினார். அப்பொழுது ஸ்படிக லிங்க பூஜையும் , சக்கர பூஜையும் செய்ததால் இவரை "ஸ்ரீ சக்கரத்து அம்மா', என்று அழைத்தனர். இதுவே "சர்க்கரை அம்மா' என்றாகிவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நட்சத்திரக் கோயிலில் உள்ள முருகன் கோயில் அருகே குணாம்பாள் என்ற சித்தரை சந்தித்து, அவரின் அருளுக்கு பாத்திரமாகி பறக்கும் ஆற்றலை பெற்றார். அதுமுதல் இவர் "பறவை அம்மா' என்று அழைக்கப்பட்டார். 1901-இல் மாசி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவர் ஜீவசமாதி அடைந்தார்.

அவருடைய கோயில் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது. இதை தலைமைச் சீடர் மருத்துவர் நஞ்சுண்ட ராவ் பரம்பரையினர் பராமரித்து வருகின்றனர். சக்கரத்து அம்மையின் 171 }ஆம் ஆண்டு ஜெயந்தி விழா, ஆடிப்பூரவிழா ஜூலை 28 (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

"நம்பிக்கையோடு நாடிவருவோருக்கு அதிசயங்களை நிகழ்த்துகிறார். நோய் தீர்த்தல், திருமணத் தடை நீக்குதல், குழந்தை பாக்கியம் அருளுதல் உள்ளிட்ட அற்புதங்களை அளிக்கிறார்' என்கின்றனர் பக்தர்கள்.

குழந்தை வரம் தரும் பிள்ளைத்தாச்சி அம்மன்!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பல்வேறு வடிவங்கள், புற்றுருவாக உள்ள அம்மன் கோயில்கள் பல உண்டு. ஆனால், நிறைமாதக் கர்ப்பிணி படுப்பதுபோல், மல்லாந்து படுத்தநிலையில் சுயம்பு வடிவில் ஸ்ரீஅங்காளம்மன் அருள்பால... மேலும் பார்க்க

கொங்கு நாட்டு குல தெய்வம்...

கொங்கு நாட்டு குல அம்மனாக, குல தெய்வமாகத் திகழும் "கொங்கு குல அம்மன்' என்ற பெயரே மருவி "கொங்கலம்மன்' ஆயிற்று என்பர். ஈரோடு மாநகரில் மணிக்கூண்டுக்கு அருகில், கொங்கலம்மன் கோயில் வீதியில் "கொங்கலாயி' என்... மேலும் பார்க்க

நினைத்தது நிறைவேறும்...

தனது தங்கை தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்துவித்து, காலநேமி தேரை ஒட்டிச் சென்றார் கம்சன். அப்போது, "உன் தங்கை வயிற்றில் உதிக்கும் எட்டாவது சிசு உன்னைக் கொல்லும்' என அசரீரி ஒலித்தது. உடனே வசுதேவரையு... மேலும் பார்க்க

நவ கயிலாய கோயில்கள்...

உலகில் சிவலிங்கத்துக்கு பெயர் பெற்ற இடம் இமயமலையில் உள்ள சிவ கயிலாயம். தென் தமிழ்நாட்டில் தாமிரவருணி ஆற்றங்கரையில் நவ கயிலாயம் என ஒன்பது கோயில்கள் உள்ளன.புண்ணிய மலையான பொதிகை மலையில் தவம் புரிந்து வந்... மேலும் பார்க்க

தாயே கருமாரி...

ஆதிபரம்பொருளான கருமாரியம்மன் ஒவ்வொரு ஊராக வலம் வந்து, தண்டலம் மயானத்துக்குச் சென்று முதன்முதலில் ஜோதி வடிவமாய் காட்சியளித்தாள். அவ்வூர் "பழந்தண்டலம்' எனப்பட்டது. அங்கிருந்து வேலங்காட்டுக்கு சென்று தன்... மேலும் பார்க்க

சிறகு இல்லாத சிறகிலிநாதர்!

ராமாயணக் காலத்தில், ராமனிடம் சடாயு என்ற கழுகு, சீதை இராவணனால் கொண்டு செல்லப்பட்ட விவரம் கூறுகிறது. "கண்டேன் தேவியை' - ராவணனுடன் சீதையை மீட்கப் போராடி அரக்கன் தன் மந்திர வாளால் சடாயுவின் சிறகை வெட்டி க... மேலும் பார்க்க