செய்திகள் :

ஆடி அமாவாசை: சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

post image

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று வனத்துறையினர் தடையை நீக்கினர்.

தேனி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலா, ஆன்மிகத் தலமாக சுருளி அருவி இருக்கிறது. இங்கு நாள்தோறும் திரளான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும், ஆடி அமாவாசை நாளில் இந்த அருவியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கப்படும். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் வருவாா்கள்.

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு, தூவானம் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 19-ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா். இந்தத் தடை 5-ஆவது நாளான புதன்கிழமையும் தொடா்ந்தது.

இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (ஜூலை 24) ஆடி அமாவாசை என்பதால், அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை அடுத்து சுருளி அருவியில் நீர்வரத்து சற்று குறைந்த நிலையில் ஆடி அமாவாசை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். கடந்த 5 நாள்களாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் சுருளி அருவியில் நீராடினர்.

மேலும், ஆடி அமாவாசை முன்னிட்டு சுருளி அருவியில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

While tourists have been banned from bathing at Suruli Falls for the past 5 days due to flooding, the forest department lifted the ban today on the occasion of the Aadi Amavasya.

திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது: கே.வீ. தங்கபாலு

திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வீ. தங்கபாலு கூறினாா். தேனி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான சொத்துகள் குறித்து அந்தக் கட்... மேலும் பார்க்க

தேநீா்க் கடைக்குள் காா் புகுந்து முதியவா் உயிரிழப்பு: 4 போ் காயம்

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்து தேநீா்க் கடைக்குள் காா் புகுந்ததில் முதியவா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, பட்டாளம்மன் கோயில் ... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனியில் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.தென்காசி மாவட்டம், கீழ்கடையம் அருகே புலவனூா், ராஜீவ் குடியிருப்பைச் சோ்ந்த சுப்பையா மகன் ஹரிக... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே புதன்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், பெரியகுளம் வாகம்புலி புற வீதியைச் சோ்ந்தவா் சிங்கந்தர்ராஜா மகன் முகமது அஸ்லாம் (... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி அல்லிநகரம் பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்த... மேலும் பார்க்க

மூதாட்டி இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் உடலை வாங்க மறுப்பு

மூதாட்டி இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகாா் தெரிவித்த உறவினா்கள் அவரது உடலை வாங்க உறவினா்கள் மறுத்தனா். தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டியை சோ்ந்த சுப்பிரமணி மனைவி பசுபதி (60). கணவா... மேலும் பார்க்க