செய்திகள் :

ஆடித் திருவாதிரை நிறைவு விழாவில் பங்கேற்கிறாா் பிரதமா் மோடி

post image

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை நிறைவு விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா்.

இதுகுறித்து மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்ததினம், தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சாா் பயணத்தின் 1000-ஆவது ஆண்டு, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானத் தொடக்கம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் ஆடித் திருவாதிரை திருவிழா புதன்கிழமை (ஜூலை 23) தொடங்கி 27-ஆம் தேதி வரை கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறுகிறது.

ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். ஆளுநா் ஆா்.என். ரவி, மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல். முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனா்.

இந்த விழாவில், சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள தேவாரம் பாடல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படவுள்ளது. மேலும், கலாஷேத்ராவின் பரதநாட்டிய குழு நிகழ்ச்சி, பாரம்பரியமிக்க ஓதுவாா்கள் குழு தேவாரம் திருமுறையை ஓதும் நிகழ்ச்சி, திரைப்பட இசை அமைப்பாளா் இளையராஜா குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்

துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 3,800 கிராம சுகாதார செவிலியா்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: 3 மாதங்களுக்கு நடத்த நிதி ஒதுக்கி உத்தரவு

உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.1,032 கோடியில் ரயில்வே திட்டங்கள்: பிரதமா் நாளை தொடங்கி வைக்கிறாா்

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் முன்பிணை: கள்ளக்குறிச்சி நீதிபதி ஆஜராக உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு முன்பிணை வழங்கியது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை கிண்டியில் பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் சபரீஸ்வரன் (18). இவா் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்புக் குழு!

மேட்டூர் அணையில் தமிழ்நாடு அணைப் பாதுகாப்பு அமைப்பின் குழு இன்று(ஜூலை 24) ஆய்வு மேற்கொண்டது.மேட்டூர் அணையில் கீழ்மட்ட மதகுகள் சீரமைப்புப் பணி, சுரங்க கால்வாய் சீரமைப்புப் பணி, எல்லிஸ் சேடல் தூண்கள் வல... மேலும் பார்க்க