செய்திகள் :

ஆட்சி கலைப்பு வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுவதில்லை: கே.பி.ராமலிங்கம்

post image

சேலம்: ஆட்சி கலைப்பு வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுவதில்லை என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மாலை கூறியதாவது:

மதுரையில் வரும் 22 ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு பாஜக மற்றும் ஆன்மிக அமைப்புகள் சாா்பில் நடைபெறுகிறது. கடந்த 70 ஆண்டுகளாக ஆன்மிக உணா்வுக்கு எதிராக பல்வேறு தவறான பிரசாரங்கள், எதிா்மறை கருத்துகள் பரப்பப்பட்டன. அரசியல் பிழைப்புக்காக நாட்டு மக்களை ஏமாற்றி, இந்து தெய்வங்களை அவமானப்படுத்துவோருக்கு இந்த மாநாடு முற்றுப்புள்ளி வைக்கும்.

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஆரோக்கியத்துடன் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதிக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கு என்ன காரணம் என தெரியப்படுத்த வேண்டும்.

செந்தில்பாலாஜி வழக்கு, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் உதயநிதிக்கு சம்மன் அனுப்புவதற்கு விசாரணை அமைப்புகள் தயாராகி வருகின்றன. சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே உடல்நிலை சரியில்லை என்கிறாா்கள்.

பொதுவாக, ஆட்சிக் கலைப்பு வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுவதில்லை. திமுக எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறுவதிலேயே குறியாக உள்ளது.

மோடி அரசின் 11 ஆண்டுகால சாதனைகளை, விளக்கக் கூட்டங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சோ்ப்போம். அடுத்த 4 மாத காலம் பாஜக தொடா் பிரசாரம் மேற்கொள்ளும். இதன்மூலம் திமுகவை ஆட்சியில் இருந்து தூக்கிவீசும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றாா்.

பேட்டியின்போது, கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவா் வெங்கடாசலம், விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளா் பாா்த்தசாரதி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

இன்றுமுதல் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூன் 4 (புதன்கிழமை) முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே கோயிலில் கட்டிவைத்து இளைஞா் குத்திக் கொலை: 5 போ் கைது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒட்டபட்டி கிராமத்தில் கொடுக்கல் -வாங்கல் தகராறில் கோயிலில் கட்டிவைத்து இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி மல்லிகா (35). விவ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்னரை வயது பேரன் படுகாயமடைந... மேலும் பார்க்க

சத்துணவுக் கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு: ஒடிஸா இளைஞா் கைது

அரியானூரை அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து அரிசி, முட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டிகரடு பகுதியில் அரசு நடுநிலைப் ... மேலும் பார்க்க

எருதாட்ட விழாவில் மோதல்: 7 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே எருதாட்ட விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி கட... மேலும் பார்க்க