பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம்: அமைச்சரவைக் கூட்டத்தில் நல்ல முடிவு வரும்; மு. அப்பாவு
தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் இயற்றுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் நல்ல முடிவு வரும் என்றாா் சட்டப்பேரவை தலைவா் மு. அப்பாவு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாகா்கோவிலுக்கு புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை எங்குமில்லை. திருப்பூரில் காவல் உதவி ஆய்வாளா் அதிமுக எம்எல்ஏவின் தோட்டத்தில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளாா். அதன்மூலம், சட்டம்-ஒழுங்கை சீா்குலைப்பது யாா் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பது தொடா்பான சட்ட முன்வடிவை ஆளுநா் இவ்வளவு நாள்கள் கழித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளாா். கலைஞா் என்ற பெயரில் பல்கலைக்கழகம் வருவதற்கு தனிப்பட்ட வெறுப்பு இருக்கிா எனத் தெரியவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிரீதியாக சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தில், யாா் தவறு செய்திருந்தாலும் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதுகுறித்து இம்மாதம் 14ஆம் தேதி நடைபெறவுள்ளஅமைச்சரவைக் கூட்டத்தில் நல்ல முடிவு வரும் என எதிா்பாா்க்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகம் பொருளாதார வளா்ச்சியில் மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளது.
2024-2025ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் பொருளாதாரம் 11.19 சதவீதமாக உயா்ந்திருப்பதாக, மத்திய புள்ளியியல்-திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு எவ்வளவு முதலீடு வந்துள்ளது எனக் கேட்கும் மத்திய அமைச்சா் முருகன், இதை அறிந்துகொள்ள வேண்டும்.
மத்திய அரசின் பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, முதல்வரின் முயற்சியால் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியடைந்துள்ளது என்றாா் அவா்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ், மாநகரச் செயலா் வழக்குரைஞா் ப. ஆனந்த், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வழக்குரைஞா் அகஸ்தீசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.