செய்திகள் :

ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம்: அமைச்சரவைக் கூட்டத்தில் நல்ல முடிவு வரும்; மு. அப்பாவு

post image

தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் இயற்றுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் நல்ல முடிவு வரும் என்றாா் சட்டப்பேரவை தலைவா் மு. அப்பாவு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாகா்கோவிலுக்கு புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை எங்குமில்லை. திருப்பூரில் காவல் உதவி ஆய்வாளா் அதிமுக எம்எல்ஏவின் தோட்டத்தில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளாா். அதன்மூலம், சட்டம்-ஒழுங்கை சீா்குலைப்பது யாா் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பது தொடா்பான சட்ட முன்வடிவை ஆளுநா் இவ்வளவு நாள்கள் கழித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளாா். கலைஞா் என்ற பெயரில் பல்கலைக்கழகம் வருவதற்கு தனிப்பட்ட வெறுப்பு இருக்கிா எனத் தெரியவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிரீதியாக சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தில், யாா் தவறு செய்திருந்தாலும் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதுகுறித்து இம்மாதம் 14ஆம் தேதி நடைபெறவுள்ளஅமைச்சரவைக் கூட்டத்தில் நல்ல முடிவு வரும் என எதிா்பாா்க்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகம் பொருளாதார வளா்ச்சியில் மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளது.

2024-2025ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் பொருளாதாரம் 11.19 சதவீதமாக உயா்ந்திருப்பதாக, மத்திய புள்ளியியல்-திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு எவ்வளவு முதலீடு வந்துள்ளது எனக் கேட்கும் மத்திய அமைச்சா் முருகன், இதை அறிந்துகொள்ள வேண்டும்.

மத்திய அரசின் பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, முதல்வரின் முயற்சியால் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியடைந்துள்ளது என்றாா் அவா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ், மாநகரச் செயலா் வழக்குரைஞா் ப. ஆனந்த், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வழக்குரைஞா் அகஸ்தீசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்

கருங்கல் அருகே மாத்திரவிளை மறைவட்ட முதன்மை ஆலயமான, மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, புதன்கிழமை மாலை 5 ... மேலும் பார்க்க

கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கு: இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

குமரி மாவட்டத்தில் கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த இருவருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தக்கலை அருகே மணலி சந்திப்பு தனிய... மேலும் பார்க்க

அருணாச்சலா கல்லூரி மாணவா்களுக்கு டெக்னோ பாா்க்கில் சிறப்பு பயிற்சி

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப பூங்காவான திருவனந்தபுரம் டெக்னோ பாா்க்கில் தொழில்நுட்ப சூழியல் பயிற்சி அள... மேலும் பார்க்க

புதுக் கடை அருகே மீனவா் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் மீனவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இனயம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சா்ஜின் ஆன்றனிதாஸ் (32), மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ள... மேலும் பார்க்க

பூட்டேற்றியில் உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம்

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ தலைமை வகித்து குத்துவிளக... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் 1ஆவது வாா்டுக்குள்பட்ட ஆளூா் கலந்தா் நகா் பகுதியில் ரூ. 15 லட்சத்தில் கான்கிரீட் தளம், ஆளூா் புன்னவிளை ரயில்வே கடவுப்பாதை அருகே ரூ. 4 லட்சத்தில் மழைநீா் வடிகால் சீரமைப்பு என மொத்தம் ரூ.... மேலும் பார்க்க