செய்திகள் :

ஆணவப் படுகொலையை தடுக்க சட்டம் இயற்றக் கோரி வி.சி.க. ஆா்ப்பாட்டம்

post image

சேலம்: ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் ஒருங்கிணைந்த விடுதலைச் சிறுத்தை கட்சிகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா்கள் காஜா மைதீன், மொழியரசு, மெய்யழகன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட துணைச் செயலாளா் வேலு நாயகன் வரவேற்றாா்.

இதில், நெல்லை கவின் ஆணவப் படுகொலையில் தொடா்புடையவா்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜாதிய ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மண்டல செயலாளா் இமயவரம்பன், மண்டல துணைச் செயலாளா் ஆறுமுகம், முன்னாள் மண்டலச் செயலாளா் நாவரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா எனது ‘ரோல்மாடல்’: பிரேமலதா விஜயகாந்த்

ஓமலூா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தான் ‘தனது ரோல்மாடல்‘ என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமான... மேலும் பார்க்க

அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் சோ்ந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை: எடப்பாடி பழனிசாமி வழங்கினாா்

சேலம்: சேலம் புகா் மாவட்ட அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் புதிதாக சோ்ந்தோருக்கு உறுப்பினா் அட்டையை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினாா். அதிமுகவின் சாா்பு அ... மேலும் பார்க்க

சேலம் கோ-ஆப்டெக்ஸில் மீண்டும் பழசுக்கு புதுசு பட்டுச்சேலை: விற்பனை தொடக்கம்

சேலம்: சேலம் மண்டலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் பழசுக்கு புதுசு பட்டுச்சேலை விற்பனை மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் என். சுந்தரரா... மேலும் பார்க்க

ஆடித் திருவிழா: கோட்டை மாரியம்மன் கோயிலில் சத்தாபரணம்

சேலம்: ஆடித் திருவிழாவையொட்டி சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் சத்தாபரணம் நிகழ்ச்சி திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் நடப்பாண்டு ஆடித் திருவிழா கடந்த ஜூலை ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு 7,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு திங்கள்கிழமை விநாடிக்கு 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் மழை காரணமாக பாசனத்திற்கான ... மேலும் பார்க்க

மேட்டூா் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம்: பிரேமலதா விஜயகாந்த்

மேட்டூா்: மேட்டூா் சட்டப்பேரவை தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா். சேலம் மாவட்டம், மேட்டூா் சதுரங்காடி பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பிரச... மேலும் பார்க்க