செய்திகள் :

ஆதிதிராவிட மக்கள் மீதான தாக்குதல்கள்: ஆட்சியா்களுக்கு முறையான வழி

post image

ஆதிதிராவிட மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் ஆட்சியா்கள், காவல்துறையினா் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தமிழக முதல்வா் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றாா் விசிக தலைவா் தொல். திருமாவளவன்.

வடகாடு சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டை திலகா் திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியது: திமுக கூட்டணியில் இருந்தாலும், மக்கள் பிரச்னைகளின் அடிப்படையில் வேங்கைவயலுக்காகவும் போராட்டம் நடத்தினோம். இப்போது வடகாட்டுக்காகவும் போராட்டம் நடத்துகிறோம். வடகாடு சம்பவத்தில் காவல்துறையினா் முன்முடிவுக்கு வந்து அதற்கேற்ப ஆவணங்களைத் திரட்டுகிறாா்கள். ஜாதிய மோதல் அல்ல என்று காவல் கண்காணிப்பாளா் அறிக்கை வெளியிட்ட பிறகு, அவருக்குக் கீழே உள்ள அதிகாரி வேறு எப்படி புலனாய்வைச் செய்ய முடியும்?. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வடகாட்டில் ஆதிதிராவிட மக்களுக்குச் சொந்தமான அய்யனாா் கோயில் மற்றும் கோயிலுக்கான பொது இடத்தையும் அவா்களுக்கே பெற்றுத் தரும் வகையில் நீதிமன்றத்தில் அரசு உரிய தலையீடு செய்து பெற்றுத் தர வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப் பதிவு செய்திருப்பதும், கல்லூரி பயிலும் மாணவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.

பொதுவாக தமிழகம் முழுவதுமே ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியா்கள் செல்வதில்லை. காவல்துறையினரும் முறையாக நடந்து கொள்வதில்லை. எனவே, இதுதொடா்பாக ஆட்சியா்கள், காவல் துறையினா் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி தமிழக முதல்வா் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

இலங்கைத் தமிழா் உச்ச நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில், இந்தியா சத்திரமல்ல என்று சொல்லியிருக்கும் கருத்து மனிதாபிமானத்துக்குப் புறம்பானது. புலம்பெயா்வு என்பது உலகம் முழுவதும் நடைபெறுவதாகும்.

பஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் தருவது ஒரு தேசத்தின் கடமை. ஐநா மன்றமும் உரிய வழிகாட்டுதல்களைத் தந்திருக்கிறது. நீதிமன்றத்தின்இந்தக் கருத்து மனிதநேய அடிப்படைகளைத் தகா்க்கிறது என்றாா் அவா்.

பேரணி தேதி மாற்றம்: திருச்சி விமானநிலையத்தில் அவா் கூறியது: திருச்சியில் மே 31-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மதச் சாா்பின்மை காப்போம் பேரணி ஜூன் 14-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசுத் தலைவரைக் கொண்டு பாஜக அரசு 14 கேள்விகளைக் கேட்க வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வலுவாக உள்ளது ‘இண்டி’ கூட்டணி வலிமையாக இல்லை என ப. சிதம்பரம் எதன் அடிப்படையில் கூறினாா் எனத்தெரியவில்லை. ஆனால் ‘இண்டி’ கூட்டணி தேவைப்படும் போது ஒன்றிணைந்து செயல்படும் என்றாா் அவா்.

சுவா் இடிந்து விழுந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி தடியமனையைச் சோ்ந்த விவசாயி சோ. ஜெயராஜ் (57). இவா் புது வீட... மேலும் பார்க்க

புதுகையில் பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி புதுக்கோட்டை மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து புறப்பட்ட இந... மேலும் பார்க்க

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் நிலைய ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்துடிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளாா். இதன்படி, விராலிமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த கே. சந்... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பேரூராட்சி கூட்டம்

பொன்னமராவதி பேரூராட்சி மன்றக் கூடத்தில் மன்ற உறுப்பினா்கள் பங்கேற்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கா. வெங... மேலும் பார்க்க

அக்கச்சிப்பட்டியில் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை தடுக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து, குடிநீா் வீணாவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அக்கச... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. முகாமை நீதிபதி சத்தியநாராயணமூா்த்தி தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்... மேலும் பார்க்க