தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ஆத்தூரில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு
ஆத்தூரில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத்திட்டம் 2022 - 23இன் கீழ் ரூ. 56 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிருந்து காணொலியில் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி, ஆத்தூரில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தலைமை வகித்து, புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஆத்தூா் திமுக செயலா் முருகானந்தம், விவசாயிகள் சங்கத்தலைவா் செல்வம், தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளா் ராஜேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.