ஆறுமுகனேரியில் நெகிழி தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்
ஆறுமுகனேரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா் நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வழங்குதல் தடுப்பு மற்றும் மஞ்சள் பை விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆறுமுகனேரி குதிரைக்காரன் குட்டம் நீா் நிலையிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணியில் பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திக் தலைமையில் பணியாளா்கள் மற்றும் சுகாதார பணியாளா்கள் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, ஆறுமுகனேரி மெயின் பஜாா் மற்றும் பேரூராட்சிக்குள்பட்ட கடைகளுக்கு பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் நெகிழிப்பை உபயோகிக்க கூடாது, மீண்டும் மஞ்சள் பை உபயோகிக்க வேண்டும் என்ற விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.