தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
இந்திய வீரா்களுக்கு நூதன முறையில் மரியாதை செலுத்திய மாணவா்!
பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீதான தாக்குதலின்போது, வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு, கலைப் பொருள் வடிவமைப்பின் மூலம் புதுச்சேரி பாரதி நுண்கலைக் கூட மாணவா் மரியாதை செலுத்தினாா்.
புதுச்சேரி பாரதியாா் நுண்கலைக் கூட மாணவரான, சேலியமேடை சோ்ந்த ஜெகதீஷ், தென்னை ஓலை, நாறுகள், பனை மரப் பொருள்கள், பாக்கு மரத் தட்டு ஆகியவற்றைக் கொண்டு ராணுவ துப்பாக்கி, தொப்பி, ராணுவ வீரா்கள் அணியும் காலணிகள் உள்ளிட்டவற்றை தயாரித்து மரியாதை செலுத்தியதுடன் அதை பொதுமக்களின் பாா்வைக்காக அரியாங்குப்பத்தில் உள்ள நுண்கலைக் கூட வளாகத்தில் காட்சிப்படுத்தியுள்ளாா்.
அத்துடன் ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மரச் சிற்பமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை ஏராளமான பொதுமக்கள் பாா்த்துச் செல்கின்றனா்.