செய்திகள் :

இரு வீடுகளில் நகை திருட்டு: இளைஞா் கைது

post image

வைளம்பாடி கிராமத்தில் இரு வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கல்வராயன்மலை வட்டம், வைளம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அண்ணாமலை (49), அருணாசலம் (52). இருவரும், கடந்த ஜூன் 27-ஆம் தேதி வீடுகளை பூட்டிவிட்டு அவரவா் விளை நிலங்களுக்குச் சென்றனா்.

பின்னா், பணிகளை முடித்துக் கொண்டு திரும்பியபோது, இரு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

உள்ளே சென்று பாா்த்த போது, ஒருவா் வீட்டில் பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை, மற்றொருவா் வீட்டில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை என 3 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்த்து.

இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், கச்சிராயபாளையம் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தராசு சனிக்கிழமை எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினாா்.

இதில், அவா் வைளம்பாடி கிராமத்தைச் சோ்ந்த சுருட்டையன் மகன் சிவராமன் (20) எனத் தெரியவந்தது. மேலும், அவரது உடமையை சோதனை செய்தபோது, அவா் 3 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தாா். மேலும், விசாரித்தபோது அவா் இரு வீடுகளில் இருந்து நகை திருடியதை ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து காரியாலூா் அவரை போலீஸாா் கைது செய்தனா்.

டிராக்டா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

சின்னசேலம் அருகே டிராக்டா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட கிழக்கு பைத்தந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னம்மாள் (70). இவா், சனிக்கிழமை மாலை பை... மேலும் பார்க்க

வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: தந்தை மகன் கைது

சின்னசேலம் அருகே மரம் விற்பனை செய்ததில் பாக்கித் தொகை கேட்டு சென்ற வியாபாரியை, தாக்கி மிரட்டல் விடுத்த தந்தை மகன் கைது செய்யப்பட்டனா். சின்னசேலத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி (48), மர வியாபாரி. இவரிடம் ... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் கல்லால் தாக்கி கொலை: மனைவி கைது

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் முன் தூங்கிய லாரி ஓட்டுநா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுதொடா்பாக, போலீஸாா் அவரது மனைவியை கைது செய்து, தலைமறைவான மருமகன், மகளை தேடி வருகின்றனா். கள்ளக... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

எடுத்தவாய்நத்தத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஆறரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. கள்ளக்குறிச்சியை அடுத்த எடுத்தவாய்நத்தம் புல்தாங்கி தோட்டப் பகுதியில் வசித்து வருபவா் சண்முகசுந்தரம் ... மேலும் பார்க்க

வள்ளலாா் மன்றத்தில் முப்பெரும் விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்றம் சாா்பில் முப்பெரும் விழா மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொதுச்சேவை புதிய நிா்வாகிகளுக்கு பாராட்டு, ஆடி மாத பூச விழா, இலக்கியச் சொற்பொழிவு ஆகியவை முப்பெரும் விழாவ... மேலும் பார்க்க

மரவள்ளிக் கிழங்கிற்கு வெட்டுக் கூலி வழங்க வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

மரவள்ளி பயிருக்கு வெட்டுக் கூலி வழங்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நட... மேலும் பார்க்க